fbpx

தமிழகம் முழுவதும் பொதுக் காலாண்டு தேர்வு ரத்து… வெளியான புதிய அறிவிப்பு…

தமிழக பள்ளிகளில் நடப்பாண்டில் பொதுக் காலாண்டு தேர்வு கிடையாது என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகள் சரிவர இயங்கவில்லை. மேலும் பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு 2 திருப்புதல் தேர்வுகள் நடத்தப்பட்டது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டதால் தேர்வுக்கான பாடப்பகுதிகள் குறைக்கப்பட்டது. மாநில அளவில் திருப்புதல் தேர்வு நடத்தப்பட்டது. ஆனால் பல இடங்களில் இந்த திருப்புதல் தேர்வு வினாத்தாள் சமூக வலைதலங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.. இம்முறை வினாத்தாள் கசியாத வகையில் இருக்க புதிய நடவடிக்கையை பள்ளிக்கல்வித்துறை எடுத்துள்ளது..

அந்த வகையில் தமிழக பள்ளிகளில் நடப்பாண்டில் பொதுக் காலாண்டு தேர்வு கிடையாது என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.. மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும், வெவ்வேறு தேதிகளில் பள்ளிகளில் காலாண்டு தேர்வு நடத்த நடவடிக்கவும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.. இம்மாதம் 30-ம் தேதியுடன் காலாண்டு தேர்வுகளை நடத்தி முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது..

Maha

Next Post

சவுக்கு சங்கர் நீதிமன்றத்தில் இருந்து வெளியேற அனுமதி மறுப்பு.. போலீசார் குவிப்பு.. பரபரப்பு...

Thu Sep 15 , 2022
சவுக்கு சங்கரின் நீதிமன்ற அவமதிப்பு விசாரணை முடிவுற்று இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு கொடுக்கப்பட உள்ளது அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் பல்வேறு யூ டியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்து வருகிறார்.. இதுதவிர சவுக்கு என்ற தனது யூ டியூப் சேனலிலும் பேசி வருகிறார்.. அந்த வகையில் கடந்த ஜூலை மாதம் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், ஒட்டுமொத்த நீதித்துறையிலும் ஊழல் நிறைந்துள்ளது என்று கூறியிருந்தார்.. இதுதொடர்பாக சென்னை […]
’நீதிமன்ற உத்தரவுகளை விமர்சிக்க உரிமை உண்டு’..! உயர்நீதிமன்ற கிளையில் சவுக்கு சங்கர் வாதம்

You May Like