fbpx

நான் காதலிக்கிறேனா? ஒவ்வொருவருக்கும் சொந்த வாழ்க்கை உள்ளது!… புரிந்துக்கொள்ளுங்கள்!… கிசு கிசுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த தமன்னா!

ஒவ்வொருவருக்கும் சொந்த வாழ்க்கை இருக்கிறது என்பதை அனைவரும் புரிந்துக்கொள்ளுங்கள் என்று தான் காதலிப்பதாக செய்திகள் பரவும் நிலையில் நடிகை தமன்னா விளக்கமளித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நடித்து வருபவர் நடிகை தமன்னா. சினிமாவில் தனது 18 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள தமன்னா, தற்போது நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் படம் மற்றும் சுந்தர் சி-ன் அரண்மனை பாகம் நான்கிலும் நடித்து வருகிறார். சமீப காலமாக அமெரிக்காவில் பணிபுரியும் டாக்டர் ஒருவரை தமன்னா திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியானது. அதற்கு முன்பு கிரிக்கெட் வீரர் விராட் கோலியை காதலிப்பதாகவும் கூறப்பட்டது. பிறகு முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்துல் ரஸாக்கை தமன்னா காதலித்து வருவதாக தகவல் வெளியானது. மேலும் இயக்குனரும் நடிகரும் நடன இயக்குனருமான பிரபுதேவாவை தமன்னா காதலிப்பதாக வதந்தி காட்டுத் தீயாக பரவியது. இப்படி தமன்னாவை சுற்று கிசுகிசுக்கள் தொடர்ந்து வலம் வந்த நிலையில் தற்போதும் ஒரு காதல் கிசுகிசு வெளியாகி இருக்கிறது. ஆனால், இந்த முறை அதற்கு மறுப்பும் தெரிவிக்காமல் லாவகமாக பதிலளித்துள்ளார் தமன்னா. அந்தவகையில் குறிப்பாக இந்தி நடிகர் விஜய் வர்மாவை அவர் காதலிப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகின்றன.

இதுதொடர்பாக விளக்கமளித்து பேசிய நடிகை தமன்னா,”எனக்கு எதிராக நிறைய வதந்திகள் பரவுகின்றன. வரவர ஒவ்வொரு விஷயத்திலுமே எதிர்மறைகள் அதிமாகிவிட்டன. வதந்திகளை யார் கிளப்பி விடுகிறார்கள் என தெரியவில்லை. நான் காதலிப்பதாக தகவல் பரப்புகிறார்கள். இதையெல்லாம் படிக்கும்போது சிரிப்புதான் வருகிறது. ஒவ்வொருவருக்கும் சொந்த வாழ்க்கை இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள். என்னை தென்னிந்திய ரசிகர்கள் மில்க் பியூட்டி என்கின்றனர். எனது உடல் நிறம் காரணமாக அப்படி அழைக்கிறார்கள். ரசிகர்கள் உணர்வுகளை புரிந்து கொள்வேன். அவர்களிடம் இருந்து நிறைய அன்பை பெற்று இருக்கிறேன்” என்றார்.

Kokila

Next Post

Woww...! யாத்திரை செல்லும் இந்துக்களுக்கு தமிழக அரசு மானியம்...! எப்படி விண்ணப்பிப்பது...?

Sun Mar 5 , 2023
மானசரோவர் மற்றும் முக்திநாத் புனித யாத்திரை மேற்கொண்டவர்கள் அரசு மானியம் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. சீனாவில் உள்ள மானசரோவர், நேபாளத்தில் உள்ள முக்திநாத் ஆகிய திருத்தலங்களுக்கு புனித யாத்திரையை முழுமையாக நிறைவு செய்து, தமிழகத்தை சேர்ந்த இந்து மதத்தை சேர்ந்தவர்களுக்கு தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்து வருகிற […]

You May Like