fbpx

வாட்ஸ் அப் நிறுவனத்தின் அசத்தல் அப்டேட்..!! இனி அனைத்தும் அட்மின் கையில்..!!

வாட்ஸ் அப் செயலியை சிலர் தவறுகளாக பயன்படுத்துவதை தவிர்க்க மெட்டா நிறுவனம் புதிய கட்டுப்பாடு ஒன்றை கொண்டு வந்துள்ளது.

அதன்படி, குழுக்களில் யாரெல்லாம் சேரலாம், யாரெல்லாம் சேரக்கூடாது என்பதை தீர்மானிக்க புதிய வழிமுறைகளை மெட்டா நிறுவனம் வழிவகை செய்துள்ளது‌. குறிப்பாக குழுவில் உள்ள உறுப்பினர்கள் தேவையற்ற செய்திகளை அனுப்பினால் அவற்றை அட்மின் டெலிட் செய்யலாமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அப்டேட்டை ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் வெர்ஷனில் வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது வாட்ஸ் அப் பயனாளர் ஒருவர் இன்வைட் லிங்கை கிளிக் செய்து எந்த ஒரு குழுவுக்குள்ளும் நுழைய முடியும். ஆனால், இனி குரூப் அட்மினின் ஒப்புதல் இன்றி புதிய நபர்கள் குழுக்களுக்குள் இணைய முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் வாட்ஸ் அப் பயனாளர் ஒருவர் அக்கவுண்ட் மூலம் கூடுதலாக நான்கு செல்போன்களில் பயன்படுத்தும் வசதியை மெட்டா நிறுவனம் ஏற்படுத்தி கொடுத்துள்ளது.

தற்போது மொபைல் போனில் பயன்படுத்தப்படும் வாட்ஸ் அப் கணக்கை மடிக்கணினிகளில் ஸ்கேன் செய்து உபயோகிக்கலாம். மேலும், ஒரே சமயங்களில் பல்வேறு மடிக்கணினிகளும் வாட்ஸ் அப்பை பயன்படுத்த முடியும். இந்நிலையில், தற்போது பல்வேறு மொபைல் போன்களில் ஒரே வாட்ஸ் அப் கணக்கை பயன்படுத்தும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வணிக ரீதியான வாட்ஸ் அப் கணக்கை பயன்படுத்துவோர் பெரிதும் பயனடைவர் என்று மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

Chella

Next Post

SSC தேர்வு மே 2 தொடங்கி 19-ம் தேதி வரை நடைபெறும்...! தேர்வர்களுக்கு கட்டுப்பாடு...!

Thu Apr 27 , 2023
பல்வகைப்பணி (தொழில்நுட்பம் அல்லாத) ஊழியர் மற்றும் ஹவில்தார் தேர்வு, 2022-ஐ கணினி அடிப்படையில் அரசுப் பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) நடத்தவுள்ளது. தென்பிராந்தியத்தில் இந்த தேர்வுக்கு 5,88,798 விண்ணப்பதாரர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தேர்வு சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர் உட்பட 19 மையங்கள் / நகரங்களில் 32 இடங்களில் நடைபெறும். தென்மண்டலத்தில் மே மாதம் 2-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை என 19 நாட்கள் […]

You May Like