fbpx

நான் பிரிட்டனில் உள்ளேன்…! போலீசாரால் தேடப்பட்டு வரும் அம்ரித் பால் சிங் வீடியோ…!

பஞ்சாப் போலீசாரால் தேடப்பட்டு வரும், காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பின் தலைவர் அம்ரித் பால் சிங் வீடியோ வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அம்ரித்பால் சிங்கின் புதிய வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார், அதில் பஞ்சாபில் தற்போது நடந்துவரும் பிரச்னைகள் குறித்து ஆலோசிப்பதற்காக சீக்கியர்கள் மாநாட்டிற்கு ஏற்பாடு செய்யும்படி, அகல் தக்த்தின் ஜதேதரிடம் கோரியிருப்பதாகவும், இந்த விஷயத்தில் சீக்கியர்களின் நலனுக்காக ஜதேதர் சாஹிப் தீர்க்கமான முடிவை எடுப்பார் என்று தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், பஞ்சாப் அரசுக்கு கண்டனம் தெரிவித்த அவர், அரசு தன்னை பெரும் போலீஸ் படையுடன் தன்னைத் துரத்தி கைது செய்ய முயன்றதாவும், இறைவன் தன்னை காப்பாற்றியதாக கூறினார். போலீசாரின் நடவடிக்கை தவறானது என்று தெரிவித்துள்ளார்.

அம்ரித் பால் சிங் வெளியிட்ட வீடியோ பிரிட்டனில் இருந்து பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், அது மூன்று நாட்களுக்கு முன்பு உத்தரப்பிரதேசத்தில் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்ட யூடியூப் கணக்கு இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Vignesh

Next Post

சுவாச கோளாறு காரணமாக போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதி...!

Fri Mar 31 , 2023
போப் பிரான்சிஸ், சுவாச நோய்த்தொற்றால் ரோமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இத்தாலி: கடந்த சில நாட்களாக சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதை அடுத்து போப் பிரான்சிஸ், வியாழன் அன்று சுவாச நோய்த்தொற்றால் ரோமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் முற்றிலும் குணமாகும் வரை சிகிச்சைக்காக ரோம் மருத்துவமனையில் தங்கியிருப்பார் என்ற செய்தி வெளியாகியுள்ளது‌. 86 வயதான போப், நுரையீரலின் ஒரு பகுதியை அகற்றினார், அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று […]

You May Like