fbpx

அதிகாலையில் நிகழ்ந்த கோர விபத்து..!! 3 பேர் பலி..!! இருவர் கவலைக்கிடம்..!! ஈரோட்டில் அதிர்ச்சி..!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சின்னனூர் கிராமத்தில், கார் மரத்தில் மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பங்களாபுதூர் பகுதியைச் சேர்ந்த குடும்பத்தினர் 5 பேர், தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக தங்களின் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் மீண்டும் தங்கள் வீட்டிற்கு திரும்பும்போது விபத்து ஏற்பட்டுள்ளது.

சின்னமனூர் பகுதியில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார், மரத்தின் மீது மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்தவர்கள் யார்? அவர்களின் ஊர் எது? என்ற விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

Chella

Next Post

3 மாதத்திற்கு இலவச ரீசார்ஜ்..!! உங்கள் வாட்ஸ் அப்புக்கும் வந்துருக்கா..? மக்களே உஷாரா இருங்க..!!

Mon Nov 13 , 2023
பண்டிகை காலங்கள், தேர்தல் நேரங்களை குறிவைத்து மக்களிடம் பலவிதமான மோசடிகள் அரங்கேறி வருகின்றன. அரசியலைப் பொறுத்தவரை தற்போது 2024இல் பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் ஒருபுறம் விறுவிறுப்புடன் மக்களை நேரில் சந்தித்து தங்களுக்கான வாக்குகளை சேகரித்து வரும் நிலையில், மோசடி செயலில் ஈடுபடும் கும்பல் இதனை தனக்கான சாதகமான வாய்ப்பாக பயன்படுத்தி மோசடிகளை தொடருகின்றன. அரசியல் கட்சிகள் உங்களுக்கு இலவசமாக ரீசார்ஜ் மற்றும் டேட்டா போன்ற சேவையை […]

You May Like