fbpx

மாவட்ட சுகாதார துறையில் வேலைவாய்ப்பு.. ரூ.23,000 வரை சம்பளம்..!! விண்ணப்பிக்க ரெடியா..?

தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் கீழ் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலிப்பணியிடங்கள்:

இயன்முறை மருத்துவர் – 1

பேச்சு சிகிச்சையாளர் – 1

உளவியலாளர் – 1

கண் நிபுணர் – 1

ஆரம்ப நிலை பயிற்சி மற்றும் சிறப்பு கல்வியாளர் மற்றும் சமூக சேவகர் – 1

ஆடியோமெட்ரிசியன் – 1

இளம் செவித்திறன் குறைபாடுடைய பயிற்றுவிப்பாளர் (பேச்சு சிசிச்சையாளர்) – 1

நடத்தை ஆய்வுக்கான சிறப்பு கல்வியாளர் – 1

வயது வரம்பு: காஞ்சிபுரத்தில் உள்ள இப்பணியிடங்களுக்கு 16.12.2024 தேதியின்படி, விண்ணப்பதார்கள் அதிகபடியாக 40 வயது வரை இருக்கலாம்.

கல்வித்தகுதி:

* இயன்முறை மருத்துவர் பிசியோதெரபிஸ்ட் பாடப்பிரிவில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

* பேச்சு சிகிச்சையாளர் பதவிக்கு தற்கான பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

* உளவியலாளர் பதவிக்கு உளவியலில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

* கண் நிபுணர் பதவிக்கு அதற்கான இளங்கலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

* ஆரம்ப நிலை பயிற்சி மற்றும் சிறப்பு கல்வியாளர் மற்றும் சமூக சேவகர் பதவிக்கு துறை சார்ந்த பிரிவுகளில் முதுகலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

* ஆடியோமெட்ரிசியன் பதவிக்கு அதற்கான டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

* இளம் செவித்திறன் குறைபாடுடைய பயிற்றுவிப்பாளர் (பேச்சு சிசிச்சையாளர்) பதவிக்கு அதற்கான இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

* நடத்தை ஆய்வுக்கான சிறப்பு கல்வியாளர் பதவிக்கு இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரம்:

  • இயன்முறை மருத்துவர் பதவிக்கு ரூ.13,000 சம்பளம் வழங்கப்படும்.
  • பேச்சு சிகிச்சையாளர் பதவிக்கு ரூ.23,000 வழங்கப்படும்.
  • உளவியலாளர் பதவிக்கு ரூ.23,000 வழங்கப்படும்.
  • கண் நிபுணர் பதவிக்கு ரூ.14,000 வழங்கப்படும்.
  • ஆரம்ப நிலை பயிற்சி மற்றும் சிறப்பு கல்வியாளர் மற்றும் சமூக சேவகர் பதவிக்கு ரூ.17,000 வழங்கப்படும்.
  • ஆடியோமெட்ரிசியன் பதவிக்கு ரூ.17,250 வழங்கப்படும்.
  • இளம் செவித்திறன் குறைபாடுடைய பயிற்றுவிப்பாளர் (பேச்சு சிசிச்சையாளர்) பதவிக்கு ரூ.17,000 வழங்கப்படும்.
  • நடத்தை ஆய்வுக்கான சிறப்பு கல்வியாளர் பதவிக்கு ரூ.23,000 வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்களில் இருந்து நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என கருதப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை: இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://kancheepuram.nic.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். இந்த பதவிகள் முற்றிலும் தற்காலிகமானது. பணியில் சேருவதற்கான நிபந்தனைக்கு கட்டுப்பட்டு ஒப்புதல் கடிதம் அளிக்க வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: நிர்வாக செயலாளர், மாவட்ட நல வாழ்வு சங்கம், மாவட்ட சுகாதார அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம் – 631 501.

Read more: சல்மான் கானின் சிக்கந்தர் படத்தால் மதராஸி படத்துக்கு வந்த சிக்கல்.. அப்செட்டில் சிவகார்த்திக்கேயன்..!!

English Summary

An employment notification has been issued to fill various vacancies in Kanchipuram district.

Next Post

சுட்டெரிக்கும் கோடை வெயில்.. இந்த உணவுகளை சாப்பிடவே கூடாது..!! கவனமா இருங்க..

Sun Mar 30 , 2025
If you eat these foods in summer.. that's all for you..!

You May Like