சென்னை புறநகரில் பகுதியில் பம்மல் ஆதாம் நகர் முதல் தெருவை சேர்ந்தவர் சின்னப்பொன்னன் (80). இவர் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன், தனது வீட்டின் அருகே இருந்த ஆடுகள் திடீரென மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அப்போது, சந்தேகமடைந்த சின்னப்பொன்னன், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தார். அதில், சிவப்பு நிற காரில் வந்த பெண் உள்பட 2 பேர் ஆடுகளை திருடி செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது. இதையடுத்து, சிசிடிவி ஆதாரத்துடன் போலீசில் புகார் அளித்தார்.
இதற்கிடையே, மீதமுள்ள ஆடுகளையும் திருடுவதற்காக அந்த கும்பல், கடந்த சில நாட்களுக்கு முன் சின்னப்பொன்னன் வீட்டிற்கு வந்துள்ளது. ஆனால், அந்த சமயத்தில் சின்னப்பொன்னன் கத்தி கூச்சலிடவே அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது. இதனையடுத்து, கார் பதிவு எண்ணை வைத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது, அனகாபுத்தூரில் உள்ள மெக்கானிக் கடையில் ஆடு திருடி சென்ற கார் நின்றிருந்தது. இந்த கார் குறித்து விசாரித்த போது அனகாபுத்தூரை சேர்ந்த ஜெயக்குமார் என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது. மேலும், அவர் தாம்பரம் அடுத்த முடிச்சூரை சேர்ந்த சரோஜினி என்ற பெண்ணுடன் இணைந்து ஆடுகளை திருடியதும் அவற்றை மதுரவாயல் கறிக்கடை உரிமையாளர் பாரூக் என்பவரிடம் விற்றதும் தெரியவந்தது. இதனையடுத்து, ஜெயக்குமார், கறிக்கடை உரிமையாளர், சரோஜினி ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மதுரவாயல் பகுதியில் கறிக்கடை வைத்திருக்கும் பாரூக் பாலியல் தொழில் செய்யும் பெண்களிடம் உல்லாசமாக இருப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். அப்போது, சரோஜினியுடன் பழக்கம் ஏற்பட்டு அடிக்கடி தனிமையில் உல்லாசமாக அனுபவித்து வந்துள்ளார். அப்போது தான் சீக்கிரம் பணக்காரர் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் பரூக் கொடுத்த ஐடியா பேரில் சரோஜினி இதுபோன்ற செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து, கைது செய்யப்பட்ட மூவரும் நீதிமன்றதத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.