அண்ணா பல்கலைக்கழக பொறியியல் படிப்புகளுக்கான முதல் செமஸ்டர் அரியர் தேர்வுகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரத்து செய்யப்பட்ட தேர்வுகள் பின்னர் நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
அண்ணல் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான முதல் செமஸ்டர் அரியர் தேர்வுகள் ஆகஸ்ட் 22ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 2ஆம் தேதி வரை நடைபெற இருந்தது. இந்த தேர்வுகள் நிர்வாக காரணங்களுக்காக தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. ரத்து செய்யப்பட்ட தேர்வுகள் பின்னர் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.