பொங்கல் திருநாளை முன்னிட்டு 3.31 கோடி லட்சம் எண்ணிக்கையிலான இலவச வேட்டி, சேலைகள் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி அறிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 115 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கும் 17,391 பள்ளி மாணவர்களுக்கு 8.39 கோடி மதிப்பிலான இலவச மிதிவண்டிகள் வழங்கும் விழாவை அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”தமிழர் திருநாளை கொண்டாடும் விதமாக ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் இலவச வேட்டி, சேலைகள் இந்தாண்டும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
அதற்காக 1.68 கோடி லட்சம் சேலைகள், 1.63 கோடி லட்சம் வேட்டிகள் கொள்முதல் செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு வழங்கப்படும் சேலைகளில் 15 ரகங்களும், வேட்டிகளில் 5 ரகங்கள் இடம் பிடித்து இருக்கிறது” என்றார்.