fbpx

இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்…! வெண்கலம் வென்றார் இந்தியாவின் எபாத் அலி…

படகு போட்டி RS:X ஆடவர் பிரிவில் இந்தியாவின் எபாத் அலி வெண்கல பதக்கம் வென்றார்.

நிங்போவில் உள்ள NBX படகோட்டம் மையத்தில் நடந்த ஆசிய விளையாட்டு ஆண்கள் படகு போட்டி(Windsurfer) RS:X நிகழ்வில் இந்தியாவை சேர்ந்த ஈபத் அலி வெண்கலம் வென்றார். இதில் ஈபத் அலி 52 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்தார், தாய்லாந்தின் நத்தபோங் ஃபோனோப்பராட் 29 புள்ளிகளுடன் வெள்ளி வென்றார், தென் கொரியாவின் சோ வோன்வூ 13 உடன் தங்கம் வென்றார்.

படகு போட்டியில் பெண்கள் Dinghy ILCA4 பிரிவில் இந்தியாவின் நேஹா தாகூர் ஏற்கனவே வெள்ளிப்பதக்கம் வென்ற நிலையில், தற்போது ஆடவர் பிரிவிலும் இந்தியாவுக்கு வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது. இதன் மூலம் இந்தியா 2 தங்கம், 4 வெள்ளி, 7 வெண்கலம் என 13 பதக்கங்களுடன் 6ஆவது இடத்தில் உள்ளது.

Kathir

Next Post

கார் விபத்தில் மரணம்..!! பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா மீது வழக்குப்பதிவு..!!

Tue Sep 26 , 2023
கார் விபத்தில் ஒருவர் உயிரிழந்தது தொடர்பாக ஆனந்த் மஹிந்திரா மற்றும் அவரது நிறுவன ஊழியர்கள் 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் கடந்தாண்டு ஜனவரி 14ஆம் தேதி தனது நண்பர்களுடன் சென்ற அபூர்வ் என்பவரின் ஸ்கார்பியோ கார் விபத்துக்குள்ளானது. காரில் ஏர்பேக் (Airbag) வேலை செய்யவில்லை, அது இருந்திருந்தால் தனது மகன் உயிர் பிழைத்திருப்பான் என்று அபூர்வின் தந்தை ராஜேஷ் மிஸ்ரா சம்மந்தப்பட்ட நிறுவனத்தில் 2022 ஜனவரி 29ஆம் தேதி […]

You May Like