fbpx

மேலும் ஒரு அதிர்ச்சி..!! தமிழகத்தில் சுங்கக்கட்டணம் அதிரடி உயர்வு..! வாகன ஓட்டிகள் ஷாக்..!

உளுந்தூர்பேட்டையை அடுத்த செங்குறிச்சி மற்றும் திருமாந்துறை சுங்கச்சாவடிகளில் வாகனங்களுக்கான கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை – பாடாலூர் வரையிலான நெடுஞ்சாலையில் உள்ள செங்குறிச்சி மற்றும் திருமாந்துறையில் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகனங்களுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை திருச்சி டோல்வே பிரைவேட் லிமிட்டெட் அறிவித்துள்ளது. இந்த புதிய கட்டண உயர்வு செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒரு அதிர்ச்சி..!! தமிழகத்தில் சுங்கக்கட்டணம் அதிரடி உயர்வு..! வாகன ஓட்டிகள் ஷாக்..!

அதன்படி ஏற்கனவே கார், வேன், ஜீப் உள்ளிட்ட வாகனங்களுக்கு ஒரு முறை செல்வதற்கான கட்டணம் ரூ.55ஆக இருந்த நிலையில், ரூ.65 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதே போல் பலமுறை சென்று வருவதற்கான கட்டணம் ரூ.85ஆக இருந்த நிலையில் ரூ.100 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இலகுரக வாகனங்கள் ஒரு முறை செல்வதற்கான கட்டணம் ரூ.100இல் இருந்து ரூ.115 ஆகவும், பலமுறை சென்று வருவதற்கான கட்டணம் ரூ.150இல் இருந்து ரூ.170 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் ஒரு அதிர்ச்சி..!! தமிழகத்தில் சுங்கக்கட்டணம் அதிரடி உயர்வு..! வாகன ஓட்டிகள் ஷாக்..!

மேலும் டிரக், பஸ்களுக்கு ஒருமுறை செல்ல ரூ.200 ஆக இருந்த கட்டணம் ரூ.230ஆகவும், பலமுறை செல்வதற்கான கட்டணம் ரூ.300ல் இருந்து ரூ.345 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. பல அச்சுகள் கொண்ட வாகனங்கள் ஒரு முறை செல்வதற்கான கட்டணம் ரூ.320ல் இருந்து ரூ.370ஆகவும், பலமுறை செல்வதற்கான கட்டணம் ரூ.480ல் இருந்து ரூ.550ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலையால் வாகன ஓட்டிகள் சிரமத்தை சந்தித்து வரும் சூழலில், இந்த டோல்கேட் கட்டண உயர்வு அமலுக்கு வர உள்ளது.

Chella

Next Post

”மக்களே குடையை மறக்காதீங்க”..! அடுத்த 3 நாட்களுக்கு இடி மின்னலுடன் மிரட்டும் கனமழை..!

Sun Aug 21 , 2022
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று மற்றும் நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. நாளை மறுநாள் தமிழ்நாடு, புதுவை மற்றும் […]

You May Like