fbpx

ஆப்பிள் பயனர்களே எச்சரிக்கை!. அதிக ஆபத்துள்ள சைபர் கிரைம் ஊடுருவல்!. கடுமையான பாதிப்பை எதிர்கொள்ளும்!

 iPhone: ஆப்பிளின் மென்பொருளில் ஊருடுபவர்கள், பயனாளிகளின் சாதனைங்களை தன்னிச்சையாக செயல்படுத்தி தகவல்களை திருட வாய்ப்பு உள்ளதாகவும் மத்திய அரசு நிறுவனமான CERT-IN நிறுவனம் எச்சரித்துள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன், ஐபேட், Mac Book. ஆப்பிள் வாட்ச், ஆப்பிள் டிவி, விஷன் ப்ரோ உள்ளிட்ட சாதனங்களை சைபர் கிரைம் குற்றவாளிகள் ஊடுருவ வாய்ப்பு உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. அப்படி மின்சாதனங்கள் பாதிப்புக்கு உள்ளாகும் பட்சத்தில் தரவுகள் திருடப்படலாம் என்றும் operating System கடுமையான பாதிப்பை எதிர்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் ஐபோன்களில் iOS17.6 க்கு முந்தைய மென்பொருள் பதிப்புகள், ஐபேடில் iPadOS 17.6 மற்றும் 16.7.9 க்கு முந்தைய பதிப்புகள், macOS Sonoma 14.6 க்கு முந்தைய பதிப்புகள் இத்தகைய தாக்குதலுக்கு உள்ளாக வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதனால், பயனர்கள் தங்கள் சாதனங்களை பாதுகாக்க ஆன்டி வைரஸ் மென்பொருட்களை உடனடியாக புதுப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஆப்பிள் ஐபோன் விற்பனை 95 லட்சமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படும் நேரத்தில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது(GFX OUT).

Readmore: வயநாடு நிலச்சரிவு..!! இதுவரை 370 பேர் உயிரிழப்பு..!! வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

English Summary

‘Highly Severe’: CERT Sounds Alert For iPhone Users, Flags ‘Multiple Vulnerabilities’ In Apple Devices – Details Inside

Kokila

Next Post

கிரேட் நிக்கோபார் திட்டம்!. இறுதிகட்ட பணிகள் தீவிரம்!. அடுத்த சில மாதங்களில் கட்டுமானம் தொடங்கும்!

Mon Aug 5 , 2024
Great Nicobar Project!. The final work is intense! Construction will begin in the next few months!

You May Like