கிரீஸ் நாட்டில் அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர்.
கிரீஸ் நாட்டில் இன்று (நவ.21) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.0ஆக பதிவாகியுள்ளது. இதனால் எந்த சேதமும் ஏற்படவில்லை. மேலும் உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நிலநடுக்கவியல் மையம் (EMSC) படி, இந்த நிலநடுக்கம் கிரேக்கத்தில் உள்ள Siteia விற்கு வடகிழக்கே 60 கி.மீ. தொலைவில் உள்ளூர் நேரப்படி அதிகாலை 1.25 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 80 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் வட ஆப்பிரிக்கா வரை உணரப்பட்டதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் யாருக்கும் காயங்கள் அல்லது கட்டிடங்களுக்கு சேதம் ஏற்படவில்லை என தகவல் தெரிவிக்கின்றன. இருப்பினும், மக்கள் அனைவரும் கடற்கரை பகுதியில் இருந்து உயரமான இடத்திற்கு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கிரீஸ் நாடு அடிக்கடி பூகம்பம் ஏற்படக்கூடிய பகுதியில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.