fbpx

மக்களே அபராதம் செலுத்த ரெடியா..? உடனே இதை செய்தால் தப்பித்துக் கொள்ளலாம்..!!

மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்காதவர்களுக்கு அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதற்கான அவகாசம் இன்னும் இரண்டு நாட்களில் முடிவடைய இருக்கிறது. இதனால், இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தமிழ்நாட்டில் 100 யூனிட் இலவச மின்சாரம், 500 யூனிட் மானிய விலையில் பயன்படுத்தும் மின் நுகர்வோர்கள் 2.67 கோடி பேர் உள்ளனர். இதையடுத்து, மின் நுகர்வோர்களின் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி கடந்த ஆண்டு நவம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கியது. டிசம்பர் 31ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டது. ஆனால், பெரும்பாலானோர் இணைக்காததால், வரும் ஜனவரி 31ஆம் தேதி வரை அவகாசம் ட்டிக்கப்பட்டது.

இதற்காக, தமிழ்நாடு முழுவதும் 2,811 மின்வாரிய பிரிவு அலுவலகங்களில் சிறப்பு கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்க இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், இதுவரை 2.25 கோடி பேர் மட்டுமே இணைத்துள்ளனர். இந்த அவகாசம் மேலும் நீட்டிக்கப்படாது என மின்வாரியம் தெரிவித்துள்ளதால், இனி மின் கட்டணம் செலுத்த முடியாததோடு, அவர்களுக்கு அபராதமும் விதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Chella

Next Post

திருத்தப்பட்ட ஐடி விதிகள்..‌.! 3 குறை தீர்வு மேல்முறையீட்டுக் குழுக்களை உருவாக்கிய மத்திய அரசு...!

Sun Jan 29 , 2023
அண்மையில் திருத்தப்பட்ட தகவல் தொழில்நுட்பம் (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் குறியீடு) விதிகள், 2021-ன் அடிப்படையில் மூன்று குறை தீர்வு மேல்முறையீட்டுக் குழுக்களை மத்திய அரசு இன்று அமைத்துள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அறிவிப்பின்படி, தலா மூன்று உறுப்பினர்களைக் கொண்ட மூன்று மேல்முறையீட்டுக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 2021 ஐடி விதிகள், நீதிமன்றங்களைத் தவிர, குறைகளைத் தீர்ப்பதற்கான வழிகளை உருவாக்குவதற்கும், புதிய பொறுப்புக்கூறல் தரங்களை உறுதி செய்வதன் மூலம் […]

You May Like