fbpx

பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையும் அந்த 5 போட்டியாளர்கள் இவர்கள் தானா..? அட இந்த பாடகியுமா..?

பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் நுழையும் 5 வைல்டு கார்டு போட்டியாளர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் தமிழ் வரலாற்றில் முதல் முறையாக இந்த 7-வது சீசனில் 5 போட்டியாளர்கள் வைல்ட் கார்டில் நுழைய உள்ளனர். இதனை கடந்த வாரம் கமல்ஹாசன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. பொதுவாக பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் 2 போட்டியாளர்கள் மட்டுமே வைல்ட் கார்டில் நுழைவார்கள்.

ஆனால், இம்முறை 5 போட்டியாளர்கள் என்ற அறிவிப்பே ரசிகர்களின் ஆச்சரியத்திற்குக் காரணம். ‘ராஜா ராணி’ சீரியல் மூலமாக புகழ்பெற்ற அர்ச்சனா, கானா பாலா ஆகிய இருவரும் வைல்ட் கார்டில் நுழைவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்ட நிலையில், மீதமுள்ள போட்டியாளர்கள் யார் என்பது குறித்தான எதிர்பார்ப்பு இருந்தது. இந்த நிலையில் அந்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

அந்த வகையில், ‘கலக்கப்போவது யாரு’ பாலா, சூப்பர் சிங்கர் புகழ் மானசி, பைக் ரேசர் சாம் சாமுவேல்ஸ், முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர் நமீதா மாரிமுத்துவின் தத்து மகள் பிரவீனா மாயா ஆகியோரது பெயர் அடிபடுகிறது. இதில் உறுதியானவர்கள் யார் என்பது இந்த வாரம் தெரியவரும்.

Chella

Next Post

’ஓவரா ஆடாத.. ஒழுங்கா பேசு..!! 'இதுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்’..!! மாயாவை திட்டித் தீர்த்த விசித்ரா..!!

Wed Oct 25 , 2023
விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ். இந்நிகழ்ச்சியில் தற்போது தினந்தோறும் சண்டை, சச்சரவுகள் என சூடுபிடித்துள்ளது. அந்த வகையில் பூர்ணிமா, மாயா, விசித்ரா இவர்களிடையில் ஒரு வாக்கு வாதம் நடைபெறுகிறது. பூர்ணிமா விசித்ரா தயாராகி வராவிட்டாலும் பரவாயில்லை நீங்கள் வந்து இருங்கள் என்று போட்டியாளர்களிடம் சொன்னதாக கூறுகிறார். அதற்கு விசித்ரா நான் தயாராகி கொண்டிருந்தேன் என்று கூறுகிறார். பிக்பாஸ் சொல்லியிருக்கிறார் காலை செயற்பாடுகள் உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் […]

You May Like