fbpx

திருமணமான மகன், மகளுடன் வசிக்கும் பெற்றோரா நீங்கள்..? அப்படினா இந்த டிப்ஸ் உங்களுக்குத்தான்..!!

திருமணமான பிள்ளைகளுடன் வசிக்கும் பெற்றோர்கள் அவர்களுடன் சுமூகமாக இருக்க சில ஆலோசனைகள் இந்தப் பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

* திருமணம் ஆகும் வரைதான் அவர்கள் நம் பிள்ளைகள். திருமணத்திற்கு பிறகு அவர்களுக்கு என்று குடும்பம் இருக்கிறது என்பதை மனதில் பதிய வைத்துக்கொள்ளுங்கள்.

* அலுவலக நெருக்கடி மற்றும் பொருளாதார பிரச்சனைகளில் பிள்ளைகள் இருந்தால் அவர்களுக்கு ஆறுதல் கூற வேண்டுமென தவிர, குத்திக்காட்டி பேசக் கூடாது.

* உரிமை என்ற பெயரில் அவர்கள் குடும்பத்துக்குள் நமது ஆலோசனைகளை திணிக்க வேண்டாம்.

* பேரக் குழந்தைகள் இருக்கும் பட்சத்தில் அதிக செல்லம் தருகிறேன் என்ற பெயரில் பெற்றோர் கண்டிக்கும்போது தலையிடாமல் இருப்பது அவசியம்.

* அவர்கள் செலவு செய்யும் விஷயத்தில் கேள்வி கேட்டு, அவர்களை எரிச்சலடைய வைக்கக் கூடாது. அவர்கள் வருமானம் என்ன? எப்படி செலவு செய்ய வேண்டும் என்பது அவர்களுக்கே தெரியும்.

* அவர்கள் அழைத்தால் மட்டுமே அவர்களுடன் வெளியே செல்ல வேண்டும். அழைக்காதபோது வேறு காரணங்கள் இருக்கலாம் என புரிந்துகொள்ள வேண்டும்.

* வயதாகி விட்டது என அறைக்குள்ளேயே முடங்கி கிடக்காமல், நம் வேலைகளை நாமே பார்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக, எதற்கெடுத்தாலும் அவர்களை சார்ந்து இருக்கக் கூடாது.

* அவர்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வரும்போது நமது பிரதாபங்களை சொல்லாமல் நகர்ந்து சென்று விடுங்கள்.

    * ‘நம் கால வசதிகள் வேறு, அவர்கள் கால வசதிகள் வேறு’ என்பதை ஏற்றுக்கொண்டு புரிதலுடன் அன்பை செலுத்தினால் நாளடைவில் பிள்ளைகளே நம் நிலை தெரிந்து தேவையான சுதந்திரம் மற்றும் அரவணைப்பை வழங்குவார்.

    Read More : ”தேசியக் கொடி ஏற்றுவதை தடுத்தால் குண்டர் சட்டம்”..!! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

    English Summary

    Here are some suggestions for parents living with married children to get along with them.

    Chella

    Next Post

    ரேஷன் கார்டு தொலைந்து விட்டதா..? புதிய கார்டு விண்ணப்பிப்பது இவ்வளவு ஈசியா..?

    Tue Aug 13 , 2024
    Don't worry if you lose your ration card. You can apply online and get new ration cards.

    You May Like