fbpx

”என்னோட EX மாதிரி நீங்க என்ன திருப்திப்படுத்தல”..!! மனைவியின் விபரீத ஆசையால் குழப்பத்தில் கணவர்..!!

இன்னும் 9 மாதங்களில் இறக்கப்போகும் தன் மனைவியின் விருப்பங்களை எல்லாம் நிறைவேற்றி வரும் கணவனிடம் அவரது மனைவி விவகாரமான ஒரு ஆசையை கூறியிருக்கிறார்.

சுமார் 10 ஆண்டுகளாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த தம்பதியரில் மனைவி தீராத நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் இன்னும் சில மாதங்களில் இறந்து விடுவார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த கணவர், மனைவியின் விருப்பத்தை எல்லாம் நிறைவேற்ற செய்திருக்கிறார்.

இந்நிலையில் மனைவி கேட்ட ஒரு விஷயத்தை நிறைவேற்றுவதா? வேண்டாமா? என முடிவெடுக்க முடியாமல் அந்தக் கணவர் திண்டாடி வருகிறார். தனது மனைவி விடுத்த கோரிக்கையால் அந்த தம்பதியரின் வாழ்க்கையே தலைகீழாக புரண்டு போய் விட்டது. அண்மையில் ஒரு இளைஞர் தனது மனைவிக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அந்த பதிவில், 9 மாதங்கள் மட்டுமே வாழ்வார் என்று மருத்துவர்கள் கூறியுள்ளதாகவும், இதனால் தனது மனைவியின் கடைசி நாட்களில் அவரை மகிழ்ச்சியாக வைத்திருக்க தான் முயற்சிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதனால் தனது மனைவியின் அனைத்து விருப்பங்களையும் தான் நிறைவேற்றி வருவதாகவும், ஆனால் அவர் கேட்ட ஒரு கோரிக்கை தன்னை நிலைகுலைய வைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

அதாவது, தனது முன்னாள் காதலனுடன் கடைசியாக ஒருமுறை உடலுறவு கொள்ள வேண்டும் என்பதே மனைவியின் ஆசையாகும். எனது மனைவி முன்னாள் காதலன் தனது வாழ்க்கையில் பாலியல் ரீதியாக தனக்கு அதிக இன்பத்தை கொடுத்ததாக நினைக்கிறாள் என விரக்தியுடன் அந்த இளைஞர் குறிப்பிட்டுள்ளார். மனைவியின் இத்தகைய ஆசையை ஏற்றுக்கொள்ள முடியாத அந்த இளைஞர், “என் மனைவிக்கு நான் சரி என்று சொல்ல வேண்டிய நிலையில் நான் இருப்பதாகவே உணர்கிறேன். ஏனென்றால் அவள் இறந்து கொண்டிருக்கிறாள். அதே சமயம், என் மனைவி தன் முன்னாள் காதலனுடன் உடலுறவை விரும்புகிறாள். அதுவே அவள் இறப்பதற்கு முன் அவளுடைய கடைசி ஆசையாக இருந்தது என்பதை நினைத்து வேதனை அடைகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

Chella

Next Post

ஏடிஎம் கார்டு பாஸ்வேர்ட் மறந்து போச்சா..? இனி கவலையே வேண்டாம்..!! ரொம்ப ஈசி தான்..!!

Tue Sep 12 , 2023
ஏடிஎம் வருவதற்கு முன்பு வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை எடுக்க நீண்ட வரிசையில் காத்திருந்து எடுப்போம். பிறகு ஏடிஎம் கார்டுகள் வந்ததும் அதன் மூலம் பணம் எடுத்து வருகிறோம். ஆனால், இப்போது டிஜிட்டல் முறையிலும் பணவரித்தனைகள் நடப்பதால், பெரும்பாலானோர் ஏடிஎம்களில் கூட பணத்தை எடுப்பதில்லை. ஆன்லைன் பரிவர்த்தனை தெரியாதவர்கள் தான் ஏடிஎம் மையங்களுக்கும் வங்கிகளுக்கும் சென்று பணத்தை எடுக்கின்றனர். அப்படி ஏடிஎம் மையத்திற்கு சென்று பணம் எடுக்கும் போது பின் […]

You May Like