fbpx

புதிய வீடு வாங்கப்போறீங்களா?… கட்டுமான நிறுவனங்களை தேர்ந்தெடுப்பது எப்படி?… நீங்கள் கவனிக்க வேண்டியவை!

எப்பாடு பட்டாவது சொந்த வீடு கட்டி விட வேண்டும் அல்லது வாங்கிவிட வேண்டும் என்பது பலரின் வாழ்நாள் விருப்பமாக இருக்கிறது. அதனால், எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக வீட்டைச் சொந்தமாக்கிக்கொள்ள நினைக்கிறார்கள். இதற்காக முதலில் நாம் செய்யவேண்டியது என்னவென்றால், இதற்காக, சரியான நிறுவனத்தை தேர்ந்தெடுப்பதுதான். இன்றைய சூழலில், கட்டுமான நிறுவனங்கள் மூன்று வகைகளாக பிரிக்கப்படுகிறது. முதலில், குறைந்த எண்ணிக்கையில் அதாவது, ஐந்து முதல், 10 வீடுகள் வரை அடங்கிய சிறிய குடியிருப்புகளை கட்டுவோர் சிறிய நிறுவனங்களாக உள்ளன.

இதற்கு அடுத்தபடியாக, 15 முதல், 20 வீடுகள் வரை அடங்கிய நடுத்தர குடயிருப்புகளை கட்டும் நிறுவனங்கள். அடுத்து, 50 மற்றும் அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையில் வீடுகள் அடங்கிய பெரிய திட்டங்களை செயல்படுத்தும் நிறுவனங்கள் என மூன்று வகைகள் உள்ளவ. அதிக வீடுகள் உள்ள பெரிய திட்டங்களை செயல்படுத்தும் நிறுவனங்களில் குறைந்த விலை வீடுகள் கட்டுவோர், ஆடம்பர வீடுகள் கட்டுவோர் என இரு வகை உண்டு. இது போன்ற வேறுபாடுகளை புரிந்து புதிய வீட்டை யாரிடம் இருந்து வாங்குவது என்பதை தீர்மானிக்க வேண்டும். இதில், சிறிய திட்டங்களை மேற்கொள்ளும் நிறுவனங்களின் திட்டங்களில் உங்களுக்கு கேள்விகள் கேட்பதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும். கட்டடத்தில் ஏதாவது பழுது என்றால் அதை சரி செய்து தர வேண்டும் என்று நீங்கள் நேரடியா பில்டரை அணுகி கேட்க முடியும்.

அதே நேரத்தில் பெரிய திட்டங்களை மேற்கொள்ளும் நிறுவனங்களிடம் நேரடி கேள்விகளுக்கான வாய்ப்புகள் மிக குறைவு. கட்டுமான நிறுவன உரிமையாளருடன் நேரடி சந்திப்புக்கே வாய்ப்பு இருக்காது.இத்தகைய நிறுவனங்கள் கார்ப்பரேட் நிலையில் செயல்படுவதால், கட்டுமான நிறுவனம் சார்பில் விற்பனை முகவர் தான் பல்வேறு விஷயங்கள் குறித்து முடிவு செய்வார். இதில் கட்டுமான திட்டத்தில் குறைபாடு இருப்பதா நீங்கள் புகார் கூறினால் அதற்கு தீர்வு கிடைப்பதற்கு தாமதம் ஏற்படும். ஆனால், சிறிய, நடுத்தர திட்டங்களுக்கான நிறுவனங்களை பொறுத்தவரை பிரச்னைகள் ஏற்பட்டாலும், அதில் தீர்வு நோக்கி செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம். சிறிய திட்டங்களை செயல்படுத்தும் நிறுவனங்கள் கட்டுமான பணியில் காட்டும் கவனத்தைவிட பெரிய திட்டங்களில் நிறுவனங்களின் நேரடி கண்காணிப்பு குறைவாகவே இருக்கும்.

Kokila

Next Post

15 நாட்களுக்கு 5,000 கன அடி வீதம் தண்ணீர்...! ஆணையத்தின் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் செல்ல தமிழக அரசு முடிவு....!

Wed Aug 30 , 2023
காவிரியில் 15 நாட்களுக்கு 5000 கன அடி வீதம் தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடகாவுக்கு உத்தரவு. 5000 கன அடி என்பது மிகவும் குறைவு என்பதால் உச்ச நீதிமன்றத்தில் முறையிட தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. காவிரி நீர் மேலாண்மை ஆணையம் ஆகஸ்ட் 29 அன்று கர்நாடகாவிற்கு அடுத்த 15 நாட்களுக்கு – செப்டம்பர் 12 வரை மாநிலங்களுக்கு இடையேயான எல்லையில் உள்ள பில்லிகுண்டுலுவில் வினாடிக்கு 5,000 […]

You May Like