fbpx

டென்சனா இருக்கீங்களா?… அப்போ சாக்லெட் சாப்பிடுங்க!… எத்தனை நன்மைகள் தெரியுமா?

எல்லாருக்கும் பிடித்த கொண்டாட்டங்களுக்கு அடையாளமாக இருக்கிற சாக்லெட் பற்றிய தகவல்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை எல்லாரும் விரும்பி சாப்பிடும் பொருள் எதுவென்றால் அது சாக்லெட் தான். உடலுக்கு நன்மை செய்யக்கூடிய ஆன்டி ஆக்சிடெண்டுகள் சாக்லெட்களில் மிகவும் அதிகமாக நிறைந்துள்ளன. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி, உடல் ஆற்றல் அதிகரிக்கும். விளையாட்டு வீரர்களின் டயட்டில் கட்டாயம் டார்க் சாக்லெட் இடம் பெற்றிருக்கும். மேலும், நாம் பயங்கர டென்சா இருக்கும்பொழுது, டார்க் சாக்லெட்டை முகர்ந்து பார்ப்பதன் மூலம் அதில் உள்ள தீட்டா அலைகள் மூளையை புத்துணர்ச்சியுடன் வைப்பதாக தெரியவந்துள்ளது.

தினமும் டார்க் சாக்லெட் சாப்பிடுவதன் மூலம் 25 சதவீதம் இதய நோய் வராமல் இருக்க வாய்ப்புள்ளது. டார்க் சாக்லெட்களில் உள்ள ஆன்டி ஆக்சிடெண்டுகள் ரத்த அழுத்தத்தைக் குறைத்து, ரத்த நாளங்களில் ரத்த உறைவினால் ரத்தக்கட்டிகள் உருவாவதை குறைத்து இதயத்துக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. ஞாபகத்திறனை அதிகரிக்கவும் இது உதவுகிறது.

பல்லாயிரம் வருடம் பாரம்பரியத்தை கொண்ட இந்த சாக்லெட், சமைக்கக்கூடிய உணவு பொருட்களிலேயே மிக குறைவான வெப்பநிலையில் அதாவது, 93 டிகிரி பாரன்கீட்டில் கரையக்கூடிய பொருள் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சாக்லெட் சாப்பிடுவதால், சூரிய வெப்பத்தால் சருமத்தில் ஏற்படும் தடிப்புகள் 25 சதவீதம் தவிர்க்கப்படுகிறது. சாக்லெட்களில் உள்ள ஃபிளேவானாய்ட்ஸ் சருமத்தை தாக்கும் அல்ட்ரா வயலெட் கதிர்களை ஊடுருவ விடாமல் எதிராக பிரதிபலிக்கிறது. சூரிய வெப்பத்தால் ஏற்படும் கட்டிகள் மற்றும் தோல் புற்றுநோய்களில் இருந்தும் பாதுகாக்கிறது.கர்ப்பிணிப் பெண்கள் உடல் நலத்துக்கு சாக்லெட்கள் மிகவும் நல்லது. அவர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை அளிக்கிறது.

ஒருவர் தினமும் சராசரியாக 30 முதல் 60 கிராம் அளவுக்குத் தரமான சாக்லெட்கள் சாப்பிட்டால் போதுமானது. மேலும், நாம் வீட்டில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளுக்கு சாக்லெட் கொடுக்கக்கூடாது .அந்த சாக்லெட்டில் உள்ள Theobromine என்ற வேதிப்பொருள் மனிதர்களுக்கு இனிப்பாகவும், செல்லப்பிராணிகளுக்கு விஷமாகும் அபாயம் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது

Kokila

Next Post

ஆதாரில் வந்துவிட்டது புதிய வசதி!... பேங்க் பேலன்சை சரிப்பார்க்கலாம்...வழிமுறைகள் இதோ!

Thu Feb 9 , 2023
ஆதார் எண்ணைப் பயன்படுத்தி ஏடிஎம் அல்லது வங்கிக் கிளைக்கு செல்லாமல் தங்கள் வங்கிக் கணக்கு இருப்பைச் சரிபார்க்கும் வகையில் புதிய வசதியை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வழங்கியுள்ளது. ஆதார் என்பது ஒவ்வொரு தனி நபரின் தனித்துவமான அடையாளத்தை நிறுவும் நோக்கத்திற்காக தனிப்பட்ட அடையாள எண்ணை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வழங்கியுள்ளது. இது இந்தியாவில் எங்கும் அடையாளம் மற்றும் முகவரிக்கான சான்றாக செயல்படும். மேலும், வங்கிக் கணக்கைத் திறக்கும்போது, […]

You May Like