தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் முதலே வெப்பம் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. அப்போது ஒரு சில இடங்களில் மட்டுமே வெப்பம் சதமடித்து வந்த நிலையில், இப்போது வெப்பத்தின் தாக்கம் மேலும் மோசமாகியுள்ளது. பல இடங்களில் வெப்பம் தொடர்ந்து சதமடித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, கோடை வெயிலில் இருந்து மக்களைச் சற்று தப்பிக்க வைக்கும் வகையில் கடந்த சில தினங்களாக தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தில் பெரும்பாலான இடங்களில் வெப்பம் தணிந்து, குளிர்ச்சியான வானிலை நிலவுகிறது.

இந்நிலையில், சித்திரை மாதம் தொடங்கி விட்டதால், வெயில் இன்னும் கடுமையாக இருக்கும். “டூடே வெதர்” என்று கூகுள் செய்து பார்த்தால் 40 டிகிரிக்கு குறையாமல் காட்டுகிறது. “அடிக்கிற வெயிலுக்கு வாட்டர் டேங்க்குள்ள இறங்கி ஒரு அரை மணிநேரம் உட்காந்துட்டு வரலாம் போல இருக்கு..!” என்கிற மைண்ட் செட்ல இருக்குற எல்லோருடைய மனதிலும் ஒரே ஒரு எண்ணம் தான் ஓடிக்கொண்டு இருக்கும். அது – ஏதாச்சும் ஒரு ஹில் ஸ்டேஷனுக்கு போயி.. ஒரு ரெண்டு மூணு நாள் ஜாலியா இருந்துட்டு வரணும்..! அதற்கான லிஸ்ட் தான் இது.
நீலகிரி
மலைகளின் அரசி என்ற பெருமையை சுமந்து நிற்பவள் நீலகிரி மலை. மேற்கு தொடர்ச்சி மலைகளின் அமைந்துள்ள முக்கியமான சிகரங்களில் ஒன்று தொட்டபெட்டா. அவலாஞ்சி ஏரி, தொட்டபெட்டா சிகரம், மான் பூங்கா, எமரால்டு ஏரி, ஊட்டி தாவரவியல் பூங்கா, ஊட்டி ஏரி, கலஹட்டி நீர்வீழ்ச்சி, முதுமலை தேசிய பூங்கா, ஊட்டி மலை ரயில், ரோஸ் கார்டன் என்று பல சுற்றுலா தங்களை தன்னுள் ஒளித்து வைத்துள்ளது.
கொடைக்கானல்
மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் காலநிலை பெரும்பாலும் மூடுபனி மற்றும் குளிர்ச்சியாக 14 டிகிரி முதல் 31 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். தாவரவியல் பூங்காக்கள், ஏரிகள், மலையோர கேம்ப் ஃபயர், பள்ளத்தாக்குகளில் சுற்றுலா செல்ல ஏற்ற இடமாக இருக்கும். அதுவும் குடும்பத்துடன் செல்வதற்கு பக்காவான ஸ்பாட் இது.
ஏற்காடு
சேலத்தில் உள்ள கிழக்குத் தொடர்ச்சி மலையின் ஷெவராய்ஸ் மலைத்தொடர், ஏற்காடு என்று அழைக்கப்படும் இது இயற்கை அழகின் களஞ்சியமாக உள்ளது. காடுகளில் அடர்ந்த முட்புதர்களுக்கு மத்தியில் காட்டெருமைகள், முங்கூஸ், பல்புல்ஸ், பார்ட்ரிட்ஜ்கள், சிட்டுக்குருவிகள் போன்ற ஏராளமான வனவிலங்குகள் இருக்கும். பிரமிக்க வைக்கும் ஏற்காடு ஏரி அதன் ஸ்வான் வடிவ படகுகளுடன் பயணிகளை ஈர்த்து வருகிறது.
ஏலகிரி
திருப்பத்தூரில் உள்ள ஏலகிரி மழையும் கோடையில் குளிர்ச்சியை தேடும் நபர்களுக்கு ஏற்றது. பசுமையான பள்ளத்தாக்குகள், உயரமான மலைகள் மற்றும் ரோஜா தோட்டங்கள் என்று குடும்பத்தோடு பயணிப்பவர்களுக்கு ஏற்றது. நீங்கள் ஒரு அட்ரினலின் ரஷ் தேடுபவர் என்றால், அந்த இடம் உங்களுக்காக பாராகிளைடிங் வசதியையும் வைத்துள்ளது.
சிறுமலை
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே அமைந்திருக்கும் அழகிய மலை தான் சிறுமலை. மலைகளின் சின்ன இளவரசி என்று அழைக்கப்படும் இங்கே பைக் ரைட், டென்ட், ட்ரெக்கிங் போவது சிறந்ததாக இருக்கும்.
கொல்லிமலை
நாமக்கல்லில் அதிகம் பார்க்கப்படாத பகுதி தான் கொல்லிமலை. மருத்துவம் செய்யும் முனிவர்கள் தங்கியிருந்த சித்தர் குகைகள் நிரம்பிய இடமாக சொல்லப்படுகிறது. ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் நீங்கள் மலையேற்றம் செய்யலாம். அதோடு அன்னாசி ஆராய்ச்சி பண்ணை, தாவரவியல் பூங்கா, மாசிலா நீர்வீழ்ச்சி மற்றும் செல்லூர் வியூ பாயிண்ட் ஆகியவற்றைப் பார்வையிடவும்.
மேகமலை
தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள மேகமலை, கடல் மட்டத்தில் இருந்து 155 மீட்டர் உயரத்தில் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் ஒரு பகுதியான இது தமிழக – கேரள எல்லையாக இருக்கிறது. இங்கு மகாராஜா மெட்டு, மணலாறு மற்றும், மேல்மணலாற போன்ற அணைகள், தண்ணீா் மூலம் நீா் மின்சாரம் தயாரிக்கும் கூடங்கள் முக்கிய சுற்றுலாத் தலங்களாகவும். ஊட்டி வரை செல்லும் பயணிகள் கோத்தகிரி வழியாக சென்றால், அதையும் சேர்த்து பார்த்துவிடலாம். மேற்குத் தொடர்ச்சி மலையில் அழகை காண அற்புதமான வாய்ப்பாக இருக்கும். வரிசையாக அடுக்கிவைத்த சீட்டுக்காயுளை போல மேற்குத்தொடர்ச்சி மலைகளை காணலாம். தேயிலை மற்றும் காஃபி தோட்டங்களை கண்டு ரசிக்கலாம்.
வால்பாறை
ஆனைமலை புலிகள் காப்பகத்தின் மத்தியில் அமைந்துள்ள வால்பாறை, வணிகமயமாக்கலில் இருந்து கொஞ்சம் விலகி நிற்பதால் இயற்கையின் இளமையை அனுபவிக்க விரும்புவோருக்கு ஒரு சிறந்த இடமாக இருக்கும். சாகச விரும்பிகள், சிறப்பு அனுமதி பெற்றால், புலிகளைக் கண்டறிய காப்பகத்திற்குள் சுற்றுலா செல்லலாம்.