fbpx

ஆம்ஸ்ட்ராங் படுகொலை..!! நீதிவேண்டி நினைவேந்தல் பேரணிக்கு அழைக்கும் இயக்குநர் பா.ரஞ்சித்..!!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ஆம் தேதி சென்னை பெரம்பூரில் அவரின் வீட்டின் அருகே படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த சில தினங்களுக்கு முன்பாக 11 பேரையும் போலீசார் காவலில் விசாரணைக்காக எடுத்திருந்தது. அதில் திருவேங்கடம் என்ற ரவுடி போலீசாரிடம் இருந்து தப்ப முயன்ற போது அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி அவருடைய மனைவி பொற்கொடி ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணன் கே.ஆம்ஸ்ட்ராங்கின் படுகொலைக்கு நீதி வேண்டி வரும் சனிக்கிழமை 20ஆம் தேதி மதியம் 3 மணியளவில் சென்னை எழும்பூரில் நினைவேந்தல் பேரணி நடைபெறவுள்ளது.

அனைத்து தலித் கூட்டமைப்பின் தலைவர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், பல்வேறு சங்கங்கள் மற்றும் கலைஞர்கள் கலந்துகொள்ளும் எழுச்சிமிகு பேரணியில் ஆயிரமாயிரமாய் அணிதிரள்வோம், வாருங்கள்” என இயக்குநர் பா.ரஞ்சித் அழைப்பு விடுத்துள்ளார்.

Read More : நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்..!! வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி..!! வானிலை மையம் எச்சரிக்கை..!!

English Summary

A memorial rally will be held in Egmore, Chennai at 3 pm on Saturday 20th to demand justice for K. Armstrong’s murder.

Chella

Next Post

’இனி டாஸ்மாக் போக தேவையில்லை’..!! ’வீடு தேடி வரும் மதுபானம்’..!! தமிழ்நாட்டில் அமலாகிறது..?

Tue Jul 16 , 2024
Odisha and West Bengal already have permission for home delivery of liquor, and it is said that the companies are planning to implement this by obtaining permission in Tamil Nadu, Karnataka, Punjab, Goa, Kerala and other states.

You May Like