fbpx

கலைஞர் கருணாநிதியின் வரவேற்பு!… நெஞ்சுக்கு நீதி புத்தகத்தை படியுங்கள்!… ஸ்டாலினுக்கு அண்ணாமலை அறிவுரை!

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழக சட்டமன்றத்தில் 2 தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது காலத்தின் கட்டாயம். பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை பல முறை உயர்த்தப்பட்டது.

1952-ம் ஆண்டு முதல் 1967-ம் ஆண்டு வரை ஒரே நேரத்தில் சட்டமன்றம், பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதுவரை 91 முறை மாநில ஆட்சிகள் கலைக்கப்பட்டு உள்ளது. அதில் 50 முறை இந்திராகாந்தி, ஆட்சிகளை கலைத்ததால் தேர்தல் நடத்தும் காலம் மாறியது. ஒரே நாடு, ஒரே தேர்தலை முன்னாள் முதல்வர் கருணாநிதி நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில் வரவேற்று எழுதியுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது தந்தையின் புத்தகத்தை படிக்கவில்லையா?இப்போது இல்லையென்றாலும் ஒரே நாடு ஒரே தேர்தல் எதிர்காலத்தில் வரும் என்று கூறியுள்ளார்.

Kokila

Next Post

அதிமுக அரசு கொண்டு வந்த ஜெயலலிதா அறக்கட்டளை சட்டத்தை நீக்க முடிவு..!! பேரவையில் மசோதா தாக்கல்..!!

Thu Feb 15 , 2024
சட்டப்பேரவையில் நேற்றைய தினம் கேள்வி நேரம் முடிந்தவுடன் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஒரு மசோதாவை தாக்கல் செய்தார். அதில், கடந்த 2020ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது தமிழ்நாடு புரட்சித் தலைவர் டாக்டர் ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்படி, சென்னை போயஸ் கார்டனில் அமைந்துள்ள ஜெயலலிதா வசித்து வந்த இடமான வேதா நிலையத்தை ஒரு நினைவு இல்லமாக மாற்றுவதற்கும், பராமரிப்பதற்கும் வகை செய்யப்பட்டது. இதனை […]

You May Like