fbpx

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார் அசோக் கெலாட்..!! விரைவில் வேட்புமனு தாக்கல்..!!

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு தான் போட்டியிட முடிவு செய்துள்ளதாக ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்கி இந்த மாதம் 30ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அக்டோபர் 17ஆம் தேதி காலை 10 மணி முதல் 4 மணி வரை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அக்டோபர் 19ஆம் தேதி காலை 10 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு, அன்றைய தினமே தலைவர் யார் என அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார் அசோக் கெலாட்..!! விரைவில் வேட்புமனு தாக்கல்..!!

இந்நிலையில், கட்சித் தலைவர் பதவி வேண்டாம் என்பதில் சோனியா காந்தி குடும்பத்தினர் உறுதியாக உள்ளனர் என்றும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு தான் போட்டியிட முடிவு செய்துள்ளதாகவும் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். மேலும், வேட்பு மனு தாக்கல் செய்யும் தேதியை விரைவில் அறிவிக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Chella

Next Post

இனி எங்கும் அலைய வேண்டியதில்லை.. பட்டா மாறுதலுக்கு ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம்..

Fri Sep 23 , 2022
எங்கிருந்து வேண்டுமானாலும் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்க தமிழ்நிலம் என்ற இணையதளத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். வருவாய்த்துறையானது மாநிலத்தின் சீரான சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கும்,  சாமானிய மக்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும் முக்கிய பங்காற்றுகிறது. அரசின் பல்வேறு சமூகப் பொருளாதாரத் திட்டங்கள் இத்துறையின் மூலம் செயல்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் வீடு மனை வாங்குவோர் அதற்கான பட்டாவில் பெயர் மாற்ற வேண்டும். பட்டா பெயர் மாற்றத்துக்கு விண்ணப்பித்தால் தாலுகா அலுவலகங்களில் அதற்கான […]

You May Like