fbpx

மாஸ் காட்டிய அஸ்வின், ஜடேஜா..!! 117 ரன்களில் சுருண்டது ஆஸ்திரேலியா..!!

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் சுழல்பந்துவீச்சாளர்களான அஸ்வின் மற்றும் ஜடேஜா பந்துவீச்சில் ஆஸ்திரேலிய அணி 177 ரன்களுக்கு சுருண்டது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இதில், இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி இன்று நாக்பூரில் தொடங்கியது. இந்தப் போட்டியில், ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, தொடக்க வீரராக களமிறங்கிய டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா ஆகிய இருவரையும் சிராஜ் மற்றும் ஷமி இருவரும் முதல் 3 ஓவர்களிலேயே பெவிலியன் திரும்ப வைத்தனர். இருப்பினும் வேக தாக்குதலைத் தாக்குப்பிடித்து, லபுஸ்சேன் மற்றும் ஸ்டீவ் சுமித் களத்தில் நின்றனர். ஆனால் காயத்திற்குப் பிறகு நீண்ட நாட்கள் கழித்து அணிக்கு திரும்பிய ஜடேஜா, தன் சுழல் மாயஜாலத்தை நடத்தி அவர்களை வெளியேற்றினார். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 63.7 ஓவர்களில் 177 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் யாரும் ஒரு சிக்ஸர் கூட அடிக்கவில்லை. இந்திய அணி தரப்பில் ஜடேஜா 5 விக்கெட்களை வீழ்த்தினார். அவர், டெஸ்ட் போட்டிகளில் 11-வது முறையாக 5 விக்கெட்களை எடுத்துள்ளார். அஸ்வின் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

இதன்மூலம் அஸ்வின் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 450 விக்கெட் வீழ்த்திய 2வது இந்திய வீரர் என்ற சாதனையை ரவிச்சந்திரன் அஸ்வின் படைத்துள்ளார். முன்னதாக இலங்கை வீரர் முத்தையா முரளிதரன் 80 போட்டிகளில் 450 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்த நிலையில், அஸ்வின் 89 போட்டிகளில் இரண்டாவதாக 450 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்திய அளவில் முன்னாள் வீரர் அணில் கும்ளே 619 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட இந்த போட்டி தொடரை இந்திய அணி குறைந்தபட்சம் 3-1 என்ற கணக்கில் வென்றால்தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டியை எட்ட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

இளைஞரை கட்டி வைத்து வாயில் சிறுநீர் கழித்த கும்பல்! இளைஞர் மீது போக்சோ சட்டம் பாயுமா?

Thu Feb 9 , 2023
ராஜஸ்தான் மாநிலத்தில் சிறுமியை பார்க்க வந்த இளைஞரை  மரத்தில் கட்டி வைத்து அடித்து அவர் மீது சிறுநீர் கழித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ராஜஸ்தான் மாநிலம் ஜோலார் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சார்ந்த இளைஞர் தனது பக்கத்து கிராமத்தில் உள்ள ஒரு சிறுமியை பார்ப்பதற்காக சென்று இருக்கிறார். அதனைக் கண்ட அவரது குடும்பத்தினர் மற்றும் கிராமத்து மக்கள் அந்த இளைஞரை கட்டி வைத்து […]

You May Like