ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொள்வதற்காக இந்திய அணியில் இடம்பிடித்திருந்த தமிழக, ஹரியானாவை சேர்ந்த இரு வீராங்கனைகள் ஊக்க மருந்து சோதனையில் சிக்கியதால் நீக்கப்பட்டுள்ளனர்.
தாய்லாந்தில் 25ஆவது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் இன்று தொடங்குகிறது. இதில், ஒவ்வொரு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டு தங்களது நாட்டிற்கு பெருமை சேர்க்க உள்ளனர். இந்திய புராணங்களில் மிகவும் மதிக்கப்படும் கடவுள்களில் ஒருவரான ஹனுமன், கான்டினென்டல் ஆளும் குழு நிறுவப்பட்ட 50 வது ஆண்டு விழாவில் நடைபெறும் நிகழ்வின் அதிகாரப்பூர்வ லோகோவாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் இந்தியா, சீனா, ஜப்பான் உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த முன்னணி வீரர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இந்த போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடித்து இருந்த குண்டு எறிதல் வீரர் கரன்வீர் சிங், 400 மீட்டர் ஓட்டப்பந்தய வீராங்கனை அஞ்சலி தேவி ஆகியோர் ஊக்க மருந்து சோதனையில் சிக்கியதால் அணியில் இருந்து நீக்கப்பட்டனர். அதாவது, இந்நிலையில் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்கும் வீராங்கனைகளுக்கு தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு முகமை (NADA) ஊக்கமருந்து சோதனை நடத்தியது. இந்த சோதனையில் அர்ச்சனா சுசீந்திரன் மற்றும் அஞ்சலி தேவி தோல்வி அடைந்தனர். இந்த இருவரிடமும் சேகரிக்கப்பட்ட சிறுநீர் மாதிரியில் அவர்கள் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்தியிருப்பது நிரூபணம் ஆனது. இதையடுத்து ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் இருந்து அர்ச்சனா சுசீந்திரன் மற்றும் அஞ்சலி தேவி ஆகிய இருவரும் தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு முகமையால் நீக்கப்பட்டனர்.
அண்மையில் நடந்த இந்தியன் கிராண்ட் பிரிக்ஸ் 2 தடகள தொடரில் 100 மீட்டர் ஓட்டத்தில் ஹிமா தாஸை பின்னுக்குத் தள்ளி தங்கப் பதக்கம் வென்றிருந்தார் தமிழகத்தை சேர்ந்த வீராங்கனை அர்ச்சனா சுசீந்திரன். அதேபோல் மற்றொரு வீராங்கனையான அஞ்சலி தேவி காயம் காரணமாக கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக விளையாடாமல் இருந்துவந்த நிலையில் சமீபத்தில்தான் அணிக்கு திரும்பினார். புவனேஸ்வரில் நடந்த தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான 400 மீட்டர் தூரத்தை 51.58 வினாடிகளில் கடந்து அஞ்சலி தேவி அசத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.