fbpx

தங்கச் சுரங்கத்தில் பயங்கர நிலச்சரிவு.. மண்ணில் புதைந்து 48 பெண்கள் பலி..!!

மாலி நாட்டில் தென்மேற்கு கோலிகோரோ பகுதியில் உள்ள கங்காபா மாவட்டத்தில் தங்க சுரங்கம் ஒன்று உள்ளது. இந்த சுரங்கத்தில் நேரிட்ட நிலச்சரிவில் சிக்கி 48 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். கெனீயா மாவட்டத்தில் உள்ள இந்த சுரங்கம் சட்டவிரோதமாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. நிலச்சரிவில் சிக்கிய மேலும் 10 பெண்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், அவர்களது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார். ஆப்பிரிக்காவின் மூன்றாவது பெரிய தங்க உற்பத்தியாளரான மாலியில் இத்தகைய விபத்துக்கள் ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது. கடந்த ஜனவரி மாதம், தெற்கு மாலியில் ஒரு தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காணாமல் போனார்கள், அவர்களில் பெரும்பாலோர் பெண்கள்.

ஒரு வருடத்திற்கு முன்பு, சனிக்கிழமை நிலச்சரிவு ஏற்பட்ட அதே பகுதியில் தங்கச் சுரங்கத் தளத்தில் ஒரு சுரங்கப்பாதை இடிந்து விழுந்து 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஏனேனில் இது போன்ற சுரங்க பணியில் ஈடுபடும் சிறிய தொழிலாளர்கள் மற்றும் முறை சாரா தொழிலாளர்கள் முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவது கிடையாது என கூறப்படுகிறது.

Read more : தமிழகத்தில் அடுத்தடுத்து வெடித்த மர்ம பொருளால் பரபரப்பு.. ஊழியர் பலி..!! – போலீசார் தீவிர விசாரணை  

English Summary

At Least 48 people killed As Goldmine Collapses In Mali

Next Post

பிளாஸ்டிக் லஞ்ச் பாக்ஸ்ல மதிய உணவு கொண்டு போறீங்களா..? உயிருக்கே ஆபத்து.. உடனே தவிர்த்திடுங்க..!!

Sun Feb 16 , 2025
Plastic Lunch Boxes: Scientists say not to eat food in plastic boxes. Because..

You May Like