குஜராத் மாநிலத்தில் தொங்கு பாலம் அறுந்து விழுந்ததில் குறைந்தது 70-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர்.
குஜராத்தின் மோர்பி நகரில் உள்ள மச்சு ஆற்றின் மீது உள்ள நூற்றாண்டு பழமையான தொங்கு பாலம் ஞாயிற்றுக்கிழமை மாலை அறுந்து விழுந்ததில் குறைந்தது 70-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். பாலம் நான்கு நாட்களுக்கு முன்பு பழுது பார்க்கப்பட்டது. நேற்று முன்தினம் முன்பு மீண்டும் திறக்கப்பட்ட பாலம், மாலை 6.30 மணியளவில் இடிந்து விழுந்தது. என்ன சமயத்தில் பாலத்தின் மேல் அதிக அளவில் மக்கள் ஒரே அளவில் கூறியதால் இந்த துயரமான சம்பவம் நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆங்கிலேயர் காலத்தில் இருந்த தொங்கு பாலத்தில் பல பெண்கள் மற்றும் குழந்தைகள் இருந்ததாக நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர். சிலர் பாலத்தின் மீது குதித்து விளையாடி கம்பிகளை இழுத்ததாக நேரில் பார்த்த ஒருவர் கூறினார். தீபாவளி விடுமுறை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் முக்கிய சுற்றுலா தலமான பாலத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மூன்று குழுக்களை மோர்பி மாவட்டத்திற்கு விரைந்து மீண்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.