fbpx

அடேங்கப்பா..! திருப்பதி கோவிலில் ஆகஸ்ட் மாத உண்டியல் காணிக்கை எத்தனை கோடி தெரியுமா?

திருப்பதி கோவிலில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் ரூ.140 கோடி உண்டியல் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியுள்ளனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த மார்ச் முதல் தொடர்ந்து 6 மாதங்களாக உண்டியல் வருமானம் ரூ.100 கோடியை கடந்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் பக்தர்கள் ரூ.140 கோடியே 70 லட்சத்தை உண்டியலில் காணிக்கையாக செலுத்தி உள்ளனர். சுமார் 22.80 லட்சம் பக்தர்கள் சுவாமியை தரிசித்துள்ளனர். திருப்பதியில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் திருப்பதி தேவஸ்தானத்துடன் இணைந்து கட்டப்பட்டு வரும் ‘நிவாச சேது’ மேம்பாலத்தின் முதற்கட்ட பணி முடிந்துள்ளது.

அடேங்கப்பா..! திருப்பதி கோவிலில் ஆகஸ்ட் மாத உண்டியல் காணிக்கை எத்தனை கோடி தெரியுமா?

திருப்பதி பஸ் நிலையம் முதல் அலிபிரி சாலை வரையிலான மேம்பாலத்தை 3 மாதங்களுக்கு முன் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி திறந்து வைத்தார். மீதமுள்ள பணிகள் குறித்து நேற்று ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த மேம்பால பணிகள் முடிந்தால், சென்னை மற்றும் ரேணிகுண்டா விமான நிலையத்தில் இருந்து வரும் பக்தர்கள் திருப்பதி நகர நெரிசலில் சிக்காமல் விரைவாக அலிபிரி சென்றடையலாம்.

Chella

Next Post

நடிகர், நடிகைகளுக்கு செக் வைத்த தயாரிப்பாளர்கள்..! செப்.10 முதல் புதிய நடைமுறை அமல்..!

Fri Sep 2 , 2022
நடிகர், நடிகைகளின் உதவியாளர்கள் செலவை நடிகர், நடிகைகளே கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு முடிவுகளை தெலுங்கு திரைப்பட வர்த்தக சபை எடுத்துள்ளது. தெலுங்கு திரைப்பட நடிகர்கள் தங்களது சம்பளத்தை குறைக்க வலியுறுத்தி கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் தெலுங்கு படப்பிடிப்புகளை தயாரிப்பாளர்கள் நிறுத்தி வைத்துள்ளனர். இதுதொடர்பாக நடந்த பேச்சுவார்த்தை சுமுகமான முடிவை எட்டி இருப்பதாகக் கூறப்படுகிறது. இன்னும் சில நாட்களில் படப்பிடிப்புகள் தொடங்கும் என்ற நிலையில், தெலுங்கு […]
நடிகர், நடிகைகளுக்கு செக் வைத்த தயாரிப்பாளர்கள்..! செப்.10 முதல் புதிய நடைமுறை அமல்..!

You May Like