fbpx

’ஆத்தி அது என்னோடதா’..? குடிபோதையில் ஆணுறுப்பை அறுத்துக் கொண்ட கட்டிட தொழிலாளி..!! தேனியில் பயங்கரம்

தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் சரவணன். கட்டிட தொழிலாளியான இவர், குடிபோதைக்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. தினந்தோறும் குடித்துவிட்டு குடும்பத்தினருடன் சண்டையிட்டு வந்துள்ளார். ஆரம்பத்தில், வார இறுதி நாட்களில் மட்டும் குடித்து வந்த சரவணன், தற்போது தினந்தோறும் குடிக்க ஆரம்பித்துள்ளார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள், உடன் வேலைச் செய்பவர்கள், உறவினர்கள், வீட்டில் இருப்பவர்கள் என அனைவரிடமும் குடித்து விட்டு, பிரச்சனை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், வழக்கம் போல வேலை முடித்து, கட்டிட பகுதிகளிலேயே குடித்து விட்டு, தனது ஆணுறுப்பை பிளேடால் தனியே துண்டித்துக் கொண்டுள்ளார். ரத்தம் சொட்ட சொட்ட சரவணன் தள்ளாடிக் கொண்டிருப்பதைப் பார்த்த சக தொழிலாளர்கள், சரவணனை மீட்டு கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். அங்கு அவருக்கு முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Chella

Next Post

செலவுக்கு பணம் தர மாட்டியா..? அப்படினா சாவு கிழவி..!! பாட்டியை போட்டுத் தள்ளிய பேத்தி..!! அம்பலமான உண்மை..!!

Thu Mar 30 , 2023
செலவுக்கு பணம் தராததால் பாட்டியை பேத்தியே கொலை செய்துவிட்டு, மர்ம நபர்கள் கொலை செய்ததாக நடகமாடியது விசாரணையில் அம்பலமானது. தஞ்சாவூர் மாவட்டம் பண்டாரவடை பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன். இவரது மனைவி செல்வமணி (55). இவரது பேத்தி ஜெயலட்சுமி. இவரின் தாய் வெளிநாட்டில் வீட்டு வேலை செய்து மாதந்தோறும் செல்வமணிக்கு ரூ.30,000 அனுப்பி வந்துள்ளார். இந்நிலையில், தனது பாட்டியான செல்வமணியிடம் பேத்தி ஜெயலட்சுமி செலவுக்காக பணம் கேட்டுள்ளார். ஆனால், பணம் தர […]

You May Like