மத்திய பிரதேசம் மாநிலம் போபால் மாவட்டத்தில் இருக்கும் தனியார் பள்ளியில் மூன்று வயது சிறுமி நர்சரி வகுப்பு படித்து வருகிறார். அந்த சிறுமி கடந்த வியாழக்கிழமை பள்ளிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினார். பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்த சிறுமியின் உடை மாற்றப்பட்டிருந்தது. வேறு உடையை யாரே சிறுமிக்கு மாற்றி அனுப்பியுள்ளனர்.
இதனால், சந்தேகமடைந்த சிறுமியின் தாய் இது பற்றி பள்ளி நிர்வாகத்திடம் கேட்டபோது, பள்ளியில் வைத்து சிறுமியின் உடையை யாரும் மாற்றவில்லை என கூறியுள்ளனர். இந்நிலையில், சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இனால், சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு டாக்டர் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதற்கான தடயங்கள் இருப்பதாக தெரிவித்தார். தனது மகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் இது பற்றி சிறுமியிடம் கேட்டுள்ளார்.
அப்போது, சிறுமியை பள்ளி வேன் ஓட்டுநர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் என்பது தெரியவந்தது. சிறுமியை பள்ளி வேனில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததுள்ளார். இது குறித்து சிறுமியின் தாய் காவல்துறையினர் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பள்ளி வேன் ஓட்டுநரை கைது செய்தனர். பள்ளி வேனில் வேலை செய்த பெண் ஊழியரையும் கைது செய்தனர்.