fbpx

இந்து மாணவிகளுடன் பேசிய முஸ்லிம் மாணவன் மீது தாக்குதல்!! – புனே-வில் பரபரப்பு!!

இந்து மாணவிகளுடன் பேசியதலால் முஸ்லிம் மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் புனே-வில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புனேவில் உள்ள சாவித்ரிபாய் புலே பல்கலைக்கழகத்தில் 19 வயதுடைய முஸ்லிம் மாணவர் ஒருவர், இரண்டு இந்து மாணவிகளுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகங்களில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் அந்த மாணவனை தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் மாணவர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறுகையில், “கடந்த ஞாயிற்றுக்கிழமை மதிய உணவுக்கு பிறகு தாக்கப்பட்ட மாணவர், இரண்டு மாணவிகளுடன் பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, இரு சக்கர வாகனங்களில் வந்த அடையாளம் தெரியாத 5 நபர்கள் இந்து மாணவிகளுடன் பேசி லவ் ஜிகாத் செய்கிறாயா எனக் கூறி தாக்கியதாக மாணவர் புகார் அளித்துள்ளார்” எனத் தெரிவித்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Post

கடைக்காரர் முன்பு ஆடைகளை கழற்றி இந்த பெண் செய்யும் காரியத்தை பாருங்க..!! வைரலாகும் வீடியோ..!!

Wed Apr 10 , 2024
இன்றைய அதிநவீன தொழில்நுட்ப உலகில் பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவுகின்றன. ஆச்சர்யப்படும் வகையில் சில வீடியோக்கள் இருந்தாலும், சர்ச்சையை தூண்டும் வகையில் சில வீடியோக்கள் அவ்வப்போது வைரலாகி வருகின்றன. அந்த வகையில், டெல்லியின் பாலிகா பஜாரில் நடந்ததாக கூறப்படும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அந்த வீடியோவில், துணிக்கடையில் ஆடை வாங்க சென்ற பெண் ஒருவர் உடைமாற்றுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஆனால், அந்த கடையில் […]

You May Like