fbpx

வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு..!! நவம்பர் மாதத்தின் விடுமுறை லிஸ்ட் வந்துருச்சு..!!

நவம்பர் மாதம் 14 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதற்கு ஏற்ப வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி பணபரிமாற்றத்தைத் திட்டமிட்டுக் கொள்ளும்படி ரிசர்வ வங்கி கேட்டுக் கொண்டுள்ளது.

வங்கிகளுக்கு பொதுவாக வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை தினங்களில் விடுமுறை அளிக்கப்படுகிறது. வார இறுதி நாட்களுக்கான விடுமுறை நாடு முழுவதும் அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தும். ஆனால், பண்டிகை தின விடுமுறைகள் மாநிலங்களுக்கேற்ப மாறுபடுகிறது.

அந்த வகையில், தற்போது நவம்பர் மாதத்திற்கான விடுமுறை பட்டியலையும் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. நவம்பர் மாதத்தில் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களையும் சேர்த்து மொத்தமாக 14 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

நவம்பர் 1 – கன்னட ராஜ்யோச்சவம், கட், கர்வா சவுத் காரணமாக பெங்களூரு, இம்பால் மற்றும் சிம்லாவில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை

நவம்பர் 5 – ஞாயிறு விடுமுறை

நவம்பர் 10 – வாங்கலா திருவிழா காரணமாக மேகாலயாவில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை

நவம்பர் 11 – இரண்டாவது சனிக்கிழமை காரணமாக நாடு முழுவதும் அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை

நவம்பர் 12 – தீபாவளி பண்டிகை

நவம்பர் 13 – கோவர்தன் பூஜை, லக்ஷ்மி பூஜை, தீபாவளி காரணமாக அகர்தலா, டேராடூன், கேங்டாக், இம்பால், ஜெய்ப்பூர், இம்பால்மற்றும் லக்னோவில் வங்கிகளுக்கு விடுமுறை

நவம்பர் 14 – தீபாவளி (பலி பிரதிபதா), விக்ரம் சம்வத் புத்தாண்டு, லக்ஷ்மி பூஜை காரணமாக அஹமதாபாத், பெலாபூர், பெங்களூர், கேங்டாக், மும்பை மற்றும் நாக்பூரில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை

நவம்பர் 15 – பாய் தூஜ், சித்ரகுப்த ஜெயந்தி, லக்ஷ்மி பூஜை, நிங்கால் சக்குபா / ப்ரத்ரி துவிதியா காரணமாக கேங்டாக், இம்பால், கான்பூர், கொல்கத்தா, லக்னோ மற்றும் சிம்லாவில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.

நவம்பர் 19 – ஞாயிறு விடுமுறை

நவம்பர் 20 – சாத் பூஜையால் பாட்னா மற்றும் ராஞ்சியில் வங்கிகள் வங்கிகளுக்கு விடுமுறை

நவம்பர் 23 – செங் குட் ஸ்னெம் காரணமாக மேகாலயாவில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை

நவம்பர் 25 – நான்காவது சனிக்கிழமை காரணமாக அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை

நவம்பர் 27 – குருநானக் ஜெயந்தி, கார்த்திகை பௌர்ணமி காரணமாக அஹமதாபாத், பெங்களூரு, சென்னை, கேங்டாக், கவுஹாத்தி, ஐதராபாத், இம்பால், கொச்சி, பனாஜி, பாட்னா, திருவனந்தபுரம் மற்றும் ஷில்லாங்கில் உள்ள வங்கிகள் தவிர நாடு முழுவதும் வங்கிகளுக்கு வங்கிகளுக்கு விடுமுறை

நவம்பர் 30 – கனகதாச ஜெயந்தி காரணமாக பெங்களூரில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்

Chella

Next Post

பேய்களை சமாதான படுத்தும் பழங்குடியினர்!… விலங்குகளை பலியிட்டு வழிபாடு செய்யும் வினோதம்!

Fri Oct 27 , 2023
பல நூற்றாண்டுகளாக மனிதர்கள் உருவாக்கிய அனைத்து தொழில்நுட்ப வளர்ச்சிகள் இருந்தபோதிலும், சமூகத்தின் சில பிரிவுகள் தங்கள் பழைய பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகளுடன் வாழ விரும்புகிறார்கள். தொழில்நுட்பம் மனித வாழ்க்கையை எவ்வளவு சுலபமாக உருவாக்கி இருக்கிறது என்பது அவர்களுக்குத் தெரியாமல் இல்லை. மாறாக, அவர்கள் தங்கள் பழைய பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகளுடன் வாழவே விரும்புகிறார்கள். இந்த பழங்குடியினரில் சிலவற்றைப் பற்றி நாம் மிகக் குறைவாகவே அறிந்திருந்தாலும், இன்னும் சிலர் கொஞ்சம் திறந்து, […]

You May Like