fbpx

தேர்வர்கள் கவனத்திற்கு… இன்று முதல் 13ஆம் தேதி வரை டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மைத் தேர்வு…!

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மைத்தேர்வு சென்னையில் இன்று முதல் ஆகஸ்ட் 13 வரை நடக்கவுள்ளது. காவல்துறை கண்காணிப்பாளர், துணை ஆட்சியர், ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் மற்றும் வணிகவரித்துறை உதவி ஆணையர் உள்ளிட்ட 92 பணியிடங்களை நிரப்ப நடக்கும் இந்த தேர்வில் சுமார் 2,113 பேர் தேர்வு எழுத உள்ளனர். மூன்று நாள் நடக்கும் இந்த தேர்வில், முதல் நாள் தமிழ் தகுதி தேர்வு நடைபெறும். இந்த தமிழ் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே இதர தாள்கள் திருத்தப்படும். சென்னையில் உள்ள 22 மையங்களில், காலை 9.30 மணி முதல் தேர்வு தொடங்க உள்ளது.

92 காலி பணியிடங்களை நிரப்புவதற்க்காக டிஎன்பிஎஸ்சி சார்பில் குரூப் 1 முதல் நிலை தேர்வு கடந்த நவம்பர் மாதம் 19ஆம் தேதி நடைபெற்றது, சுமார் 1.90லட்சம் பேர் கலந்து கொண்டனர், இந்த தேர்வு முடிவுகள் கடந்த ஏப்ரல் மாதம் 28-ம் தேதி வெளியானது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்று முதல் மூன்று நாட்களுக்கு முதன்மைத் தேர்வு நடக்கவுள்ளது.

Kathir

Next Post

சூப்பர் வாய்ப்பு..! Group C மற்றும் D தேர்வுக்கு வரும் 23-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு...!

Thu Aug 10 , 2023
சுருக்கெழுத்தாளர் நிலை சி மற்றும் டி தேர்வு 2023-க்கான அறிவிப்பை பணியாளர் தேர்வாணையம் கடந்த 2-ம் தேதி வெளியிட்டது. பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள பல்வேறு மத்திய அமைச்சகங்கள், துறைகள், இணைக்கப்பட்ட அலுவலகங்கள், துணை அலுவலகங்கள், சட்டபூர்வ அமைப்புகள் ஆகியவற்றில் சுருக்கெழுத்தாளர் நிலை சி மற்றும் டி பணியிடங்களில் ஆள்சேர்ப்புக்காக கணினி அடிப்படையிலான போட்டித் தேர்வுகளை ஆணையம் நடத்தவுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு வயது வரம்பு, கல்வித்தகுதி, கட்டணம், […]

You May Like