தற்போது பெரும்பாலானோர் UPI முறை மூலம் பணப் பரிவர்த்தனையை மேற்கொள்கின்றனர். இதன் மூலம் எளிதாகவும், விரைவாகவும் பணம் செலுத்த முடியும் என்பதால் பலரின் விருப்பமாக யுபிஐ முறை உள்ளது.. இதை மனதில் வைத்து ரிசர்வ் வங்கி அண்மையில் UPI லைட்டை அறிமுகப்படுத்தியது..
UPI லைட் என்றால் என்ன: இந்த UPI லைட்டின் உதவியுடன், பயனர்கள் PIN ஐப் பயன்படுத்தாமல் ரூ.200 வரை பணம் செலுத்த முடியும். மேலும் QR குறியீட்டை ஸ்கேன் செய்து UPI மூலம் பணம் செலுத்த RuPay கிரெடிட் கார்டுகளை இப்போது பயன்படுத்தலாம். இனி, RuPay கிரெடிட் கார்டைப் பயன்படுத்துபவர்கள் தங்கள் கார்டை ஸ்வைப் செய்யாமலேயே Pos இயந்திரங்களில் வசதியாக பணம் செலுத்த முடியும்.
UPI லைட்டை யார் பயன்படுத்தலாம்: NPCI இன் படி, BHIM பயன்பாட்டில் UPI லைட் அம்சம் இயக்கப்பட்டுள்ளது. HDFC வங்கி, கனரா வங்கி, இந்தியன் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி, யூனியன் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட வங்கிகள் இந்த அம்சத்தை அறிமுகம் செய்துள்ளன..
முதலில் கிரெடிட் கார்டை UPI உடன் இணைக்க வேண்டும். அதன் பிறகு, QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் பணம் செலுத்தலாம். பணம் செலுத்தும் போது, கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டைப் பயன்படுத்துவதற்கான தேர்வு உங்களுக்கு இருக்கும். நீங்கள் பணம் செலுத்தத் தொடங்கியவுடன் UPI செயலிகள் உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பும். OTP ஐ உள்ளிட்டதும் பணம் செலுத்துதல் முடிவடையும்.