fbpx

பான் கார்டில் இந்த வேலைகளை சீக்கிரமா முடிங்க..!! ரூ.101 இருந்தால் போதும்..!! எப்படி தெரியுமா..?

நாடு முழுவதும் பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. அதற்கான தேதியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜூன் 30 வரை இணைக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டிருக்கிறது.. பான் அட்டையை இதில் கட்டணமில்லாமல் இணைக்கலாம்.. இல்லையென்றால் உங்கள் பான் செயலற்றதாகி விடும். இதற்கிடையே, பான் கார்டில் சிலர் மாற்றங்கள், திருத்தங்கள் செய்ய நேரிடலாம்.. முகவரி உட்பட சில அடிப்படை விவரங்களை மாற்ற வேண்டும் என்று நினைப்பார்கள். ஆதார் கார்டில் மாற்றங்களை செய்ய தெரிந்த பலருக்கும் பான் கார்டில் எப்படி மாற்றங்களை செய்வது என்று தெரியாது.

பின்வரும் படிநிலைகளை பின்பற்றினால் பான் கார்டில் எளிமையாக மாற்றங்களை செய்ய முடியும். உதாரணமாக பான் கார்டில் முகவரியை ஆன்லைனில் எப்படி மாற்றுவது என்று இங்கே பார்க்கலாம்.

* முதலில் NSDL இணையதளமான https://www.onlineservices.nsdl.com/paam/endUserRegisterContact.html என்பதை பார்க்க வேண்டும்.

* அதன்பிறகு, அப்ளிகேஷன் டைப் ஆப்ஷனில் ‘Change or Correction in PAN Data’ என்பதை தேர்வு செய்து கொள்ள வேண்டும்.

* பிறகு, “Category Type” என்பதை தேர்வு செய்து அதில் தனிப்பட்ட விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும்.

* அடுத்ததாக, தேவையான விவரங்களை நாம் தந்து கொண்டிருக்க வேண்டும். அடுத்ததாக, “கேப்ட்சா” குறியீட்டை உள்ளிட்டு சமர்ப்பிக்க வேண்டும்.

* KYC விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து, அதற்கு பிறகு, புகைப்படம் அல்லது கையொப்பம் இல்லாமல் தந்தை அல்லது தாயின் விவரங்களை உள்ளிட வேண்டும்.

* பின்பு, ‘Next for PAN Card Signature Change or Photo Update’ என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

* பின்பு ஐடி, முகவரி மற்றும் பிறந்த தேதிக்கான ஆதாரத்தை இணைக்கும்படி கேட்க, அதனை இணைக்க வேண்டும். பிறகு செக்பாக்ஸை டிக் செய்து ‘Submit’ பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.

* இறுதியாக பணம் செலுத்தும் ஆப்சன் வரும், அதில் உங்கள் புகைப்படம் மற்றும் கையொப்பத்தை பான் கார்டில் மாற்றுவதற்கு ரூ.101 (ஜிஎஸ்டி உட்பட) செலுத்த வேண்டும்.

* நிர்ணயிக்கப்பட்ட தொகையை செலுத்திய பிறகு, குறிப்பிட்ட செயல்முறையின் ஒப்புதலுக்காக 15 இலக்க எண்கள் வரும். பின்னர், விண்ணப்பம் பதிவிறக்கம் செய்யப்பட்டு, பான் சேவா பிரிவுக்கு அனுப்ப வேண்டும்.

* நீங்கள் பெற்ற 15 இலக்க ஒப்புகை எண்ணைப் பயன்படுத்தி, உங்கள் விண்ணப்பம் அடைந்த நிலையைக் கண்காணித்துக் கொள்ளலாம்.

Chella

Next Post

முன்கூட்டியே எச்சரித்த மருத்துவர்கள்..!! அதிகளவு மது குடித்த வாலிபர்..!! டாஸ்மாக் பாரில் மரணம்..!! எடப்பாடியில் பரபரப்பு

Tue Jun 20 , 2023
எடப்பாடி அருகே மருத்துவர்களின் எச்சரிக்கையையும் மீறி, அதிகளவு மது குடித்ததால் வாலிபர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த வெள்ளரி வெள்ளி அருகே கள்ளுக்கடை பகுதியில் அரசு மதுபானக் கடையும் அதன் அருகே மதுபான பார் ஒன்றும் செயல்பட்டு வருகிறது. அந்த பாரில் நேற்று மாலை வாலிபர் ஒருவர் இறந்துகிடந்ததை கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், இதுகுறித்து பூலாம்பட்டி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, […]
முன்கூட்டியே எச்சரித்த மருத்துவர்கள்..!! அதிகளவு மது குடித்த வாலிபர்..!! டாஸ்மாக் பாரில் மரணம்..!! எடப்பாடியில் பரபரப்பு

You May Like