fbpx

அடுத்த 4 நாட்கள் கவனம்..!! இடி மின்னலுடன் பலத்த மழை பெய்யுமாம்..!! வானிலை ஆய்வு மையம் அலெர்ட்..!!

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று முதல் அக்டோபர் 3ஆம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மத்தியக்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல், மியான்மர் கடற்கரை பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதன் காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆலப்புழா, கோழிக்கோடு, காசர்கோடு, கண்ணூர், திருச்சூர், மலப்புரம், கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி ஆகிய மாவட்டங்களில் இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

சென்னை பல்கலைக்கழகத்தில், மாதம் 30,000 ரூபாய் ஊதியத்தில் காத்திருக்கும் சூப்பர் வேலை வாய்ப்பு....!

Fri Sep 29 , 2023
நாள்தோறும் நம்முடைய செய்தி நிறுவனத்தில், பல்வேறு வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை நாம் வெளியிட்டு வருகிறோம். அந்த வகையில், இன்றும் பல்வேறு வேலை வாய்ப்பு குறித்த செய்திகளை வெளியிட்டு இருக்கின்றோம். அதன்படி, இன்று சென்னை பல்கலைக்கழகம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள வேலை வாய்ப்பு அறிவிப்பு பற்றி தெரிந்து கொள்ளலாம். சென்னை பல்கலைக்கழகம் தற்போது ஒரு புதிய வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. அதன்படி இந்த பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அந்த பல்கலைக்கழகத்தில் […]

You May Like