fbpx

மாணவர்கள் கவனத்திற்கு..!! பொதுத்தேர்வு சான்றிதழ்களை லேமினேஷன் செய்யக்கூடாது..!! வெளியான அதிரடி உத்தரவு..!!

பள்ளி மாணவர்கள் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு சான்றிதழ்களை லேமினேஷன் செய்ய வேண்டாம் என கல்வித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகள் மாறும்போது டிசி எனப்படும் மாற்று சான்றிதழ் வழங்கப்படும். அதனை தவிர 10ஆம் வகுப்பு, 11ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்களும், 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ்களும் வழங்கப்படுகின்றன.

அந்த சான்றிதழ்களில் எதாவது கறை படியாமல் இருக்கவும், கிழிந்துவிடாமல் இருக்கவும் அதனை பலரும் லேமினேஷன் செய்து வைக்கின்றனர். இந்நிலையில், இதுதொடர்பாக ஆசிரியர்ளுக்கு கல்வித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தல்களை வழங்கி இருக்கின்றனர். ஆசிரியர்கள் மாணவர்களுக்கு இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனர்.

அதாவது, அரசு தேர்வுத்துறையால் வழங்கப்படும் மதிப்பெண் சான்றிதழை லேமினேட் செய்யாமல் இருந்தால், எதிர்காலத்தில் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பின் போது சான்றிதழ் பின்புறம் அரசு முத்திரை வைக்க முடியும். அந்த நேரத்தில் லேமினேட் செய்வதை பிரித்தால் சான்றிதழ் கிழிந்துவிடும். எனவே, மாணவர்கள் பாதுகாப்பாக அதனை வைத்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Chella

Next Post

ஆந்திராவில் திடீர் வன்முறை..!! தமிழகத்தில் இருந்து செல்லும் பேருந்துகள் நிறுத்தம்..!! பொதுமக்கள் அவதி..!!

Sat Aug 5 , 2023
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு மேற்கொண்ட சுற்றுப்பயணத்தின்போது பயங்கர வன்முறை வெடித்ததால், தமிழ்நாட்டிலிருந்து சித்தூர், திருப்பதி செல்லும் பேருந்துகள் வேலூர், திருப்பத்தூர் பேருந்து நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஆந்திர அரசின் நீர் மேலாண்மை திட்டப்பணிகளை பார்வையிட தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு திட்டமிட்டிருந்தார். அதன்படி, சித்தூர் மாவட்டத்தில் உள்ள புங்கனூர் பகுதிக்கு அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தொண்டர்கள் சந்திரபாபு நாயுடுவின் கான்வாய் வாகனத்தை தடுக்க […]

You May Like