சென்னையில் ஓலா, உபேர் உள்ளிட்ட கால் டாக்சி ஓட்டுநர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் 18ஆம் தேதி வரை ஆகிய மூன்று நாட்களுக்கு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.
கல் டாக்சி நிறுவனங்கள் எடுத்துக்கொள்ளும் கமிஷன் தொகையை குறைக்க வேண்டும் என்றும், விதிகளை மீறி செயல்படும் சுங்கச்சாவடிகளை மூட வேண்டும், மேலும் பைக் டாக்சிகளை ரத்து செய்யவேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் மூன்று நாட்களுக்கு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.
சென்னையில் தனியார் நிறுவன ஊழியர்கள் உள்பட பலர் எளிதில் பயணம் செய்ய ஓலா, உபேர் உள்ளிட்ட கால் டாக்சிகளை பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் நாளை முதல் கால் டாக்சி ஓட்டுநர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளது பலரை பாதிக்கும் என்று கருதப்படுகிறது.