fbpx

நாளை வேலைக்கு செல்பவர்கள் கவனத்திற்கு…! 3 நாட்களுக்கு கால் டாக்சி ஓட்டுநர்கள் வேலை நிறுத்தம்..!

சென்னையில் ஓலா, உபேர் உள்ளிட்ட கால் டாக்சி ஓட்டுநர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் 18ஆம் தேதி வரை ஆகிய மூன்று நாட்களுக்கு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.

கல் டாக்சி நிறுவனங்கள் எடுத்துக்கொள்ளும் கமிஷன் தொகையை குறைக்க வேண்டும் என்றும், விதிகளை மீறி செயல்படும் சுங்கச்சாவடிகளை மூட வேண்டும், மேலும் பைக் டாக்சிகளை ரத்து செய்யவேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் மூன்று நாட்களுக்கு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.

சென்னையில் தனியார் நிறுவன ஊழியர்கள் உள்பட பலர் எளிதில் பயணம் செய்ய ஓலா, உபேர் உள்ளிட்ட கால் டாக்சிகளை பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் நாளை முதல் கால் டாக்சி ஓட்டுநர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளது பலரை பாதிக்கும் என்று கருதப்படுகிறது.

Kathir

Next Post

ஆரஞ்சு பழம் யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்த உதவுமா….?

Sun Oct 15 , 2023
உடலில் யூரிக் அமிலம் அதிகரிப்பதன் காரணமாக, கீல்வாதம் மற்றும் சிறுநீரக கற்களால் பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புண்டு, யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்தும் ஒரு சில வழிமுறைகளை பற்றி தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம். அதாவது, முடக்கு வாதம், மூட்டு திசு சேதங்கள் என்று பல்வேறு பிரச்சனைகளை மட்டுமல்லாது, இதய நோய்களையும் ஏற்படுத்தும் பியூரின்கள் அதிகமாக இருக்கின்ற ஒரு சில உணவுகளை சாப்பிடாமல் தவிர்ப்பதன் மூலமாக, இந்த யூரிக் அமில பிரச்சனை மட்டுமல்லாமல், […]

You May Like