fbpx

Automatic Door Lock System..!! பெற்றோர்களே உஷார்..!! வீட்டுக்குள் கதறிய ஒரு வயது குழந்தை..!!

வீட்டில் ஸ்டைலுக்காக வைத்திருக்கும் ஆட்டோமெட்டிக் டோர் லாக் சிஸ்டத்தால் (Automatic Door Lock System) ஒரு வயது குழந்தை வீட்டுக்குள் சிக்கிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கொரட்டூர் பழைய போஸ்ட் ஆபீஸ் தெருவில் உள்ள ஒரு வீட்டின் முதலாவது மாடியில் வசித்து வருபவர் பரத். இவரது மனைவி பிரியா. இந்த தம்பதிக்கு தன்வின் என்ற ஒரு வயது குழந்தை உள்ளது. இந்நிலையில், நேற்று வழக்கம் போல் பாரத்தின் அம்மாவிடம் குழந்தையை விட்டுவிட்டு கணவன் – மனைவி இருவரும் வேலைக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. அப்போது, வீட்டின் படுக்கை அறையில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை தன்வின், அறையின் கதவை உள்பக்கம் மூடிக்கொண்டது. இதனால் கதவு ஆட்டோ-லாக் ஆனதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, குழந்தை வீட்டுக்குள் அழும் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் கதவை திறக்க முயற்சி செய்தனர்.

Automatic Door Lock System..!! பெற்றோர்களே உஷார்..!! வீட்டுக்குள் கதறிய ஒரு வயது குழந்தை..!!

ஆனால், கதவை திறக்க முடியாத நிலையில் உடனடியாக அம்பத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு அலுவலர் முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட வீரர்கள் துரிதமாக செயல்பட்டு ஹைட்ராலிக் கட்டிங் இயந்திரம் மூலம் கதவை உடைத்து குழந்தையை பத்திரமாக மீட்டனர். குழந்தையை துரிதமாக மீட்ட தீயணைப்பு மீட்பு துறையினரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

ரூ.25,000 ஊதியம்...! பட்ட படிப்பு முடித்த நபர்களுக்கு வேலைவாய்ப்பு…! விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்…!

Wed Dec 14 , 2022
கத்தோலிக்க சிரியன் வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Director, Faculty, Counsellorபணிகளுக்கு என மொத்தம் நான்கு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 65 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் / கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் பட்டம் முடித்தவராக இருக்க வேண்டும்.. மேலும் பணியில் முன் அனுபவம் 10 ஆண்டு […]
இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க..!! தனியார் வங்கிகளில் வேலைவாய்ப்பு..!! என்ன செய்ய வேண்டும்..?

You May Like