fbpx

குழந்தை வெளியே… கத்தரிக்கோல் உள்ளே..!! அறுவை சிகிச்சையின்போது அரங்கேறிய அவலம்..!! மருத்துவர்கள் பணிநீக்கம்..?

அறுவை சிகிச்சையின் போது பெண்ணின் வயிற்றுக்குள் கத்திரிக்கோலை வைத்து தைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆந்திர மாநிலம் ஏளூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது. பின்னர், குழந்தை பிறந்து வீடு திரும்பிய அந்தப் பெண், கடந்த நான்கு மாதங்களாக கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. இதையடுத்து, மீண்டும் அவர் மருத்துவமனைக்கு விரைந்துச் சென்று எக்ஸ்ரே எடுத்து பார்த்துள்ளார். அப்போது, வயிற்றில் கத்தரிக்கோல் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

மேலும், இந்த விவகாரம் வெளியே தெரியாமல் மறைக்க மருத்துவர்கள் திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், அந்த எக்ஸ்ரேவை மருத்துவமனை ஊழியர்கள் சிலர், சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அந்தப் பதிவும் நீக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண்ணை விஜயவாடா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வெளியே தெரியாமலும் மருத்துவர்கள் பார்த்துக் கொண்டனர். இந்நிலையில், வயிற்றில் கத்தரிக்கோல் வைத்து தைத்த மருத்துவர்கள் அனைவரும் பணியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று மருத்துவமனை கண்காணிப்பாளர் உறுதியளித்துள்ளார்.

Chella

Next Post

காலை உணவை தவிர்ப்பவரா நீங்கள்..? நெஞ்செரிச்சல், வயிற்றுப்புண் போன்ற பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்…

Fri Aug 18 , 2023
சிலர் காலையில் அலுவலகம் கிளம்பும் வேகத்தில் காலை உணவை தவிர்த்துவிடுகின்றனர், சிலரோ வேறு சில காரணங்களால் காலை உணவை தவிர்த்து வருகின்றனர். இதனால், நம் உடலுக்கு நன்மை செய்வதற்குப் பதிலாக, நாமே தீங்கு விளைவிப்பதோடு, இதனால் பல பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. இப்படி காலை உணவை தவிர்த்து வருபவர்களுக்கு உடல்நல பிரச்சனைகள் ஏற்படக்கூடும். காலையில் அவசர அசரமாக சாப்பிடாமல் வேலைக்கு செல்பவர்களுக்கு அமிலத்தன்மை பிரச்சனை ஏற்படும். நீண்டகாலமாக காலை உணவை தவிர்த்து […]

You May Like