fbpx

கொத்தடிமையாய் குழந்தை தொழிலாளர்கள்.. அரங்கேறிய கொடூரங்கள்.!

உத்திர பிரதேச மாநிலத்தில் இருக்கும் சவுந்தலை மாவட்டத்தில் 11 சிறுவர்கள் உள்ளிட்ட 21 பேர் சாலையில் அங்குமிங்கும் சுற்றி திரிந்துள்ளார்கள். இவர்களை கவனித்த ரயில்வே பாதுகாப்பு காவல்துறையினர் பிடித்து விசாரித்ததில் அவர்கள் அனைவரும் வாரணாசி லோத்தா பகுதியில் ரயில் தண்டவாளத்தில் ஸ்லீப்பர் கட்டை உற்பத்தி செய்கின்ற ஆலையில் வேலை செய்து வந்தது தெரியவந்துள்ளது.

அந்த ஆலையில் அவர்களுக்கு எந்த சம்பளமும் கொடுக்கப்படவில்லை. இது குறித்து பாதிக்கப்பட்ட குழந்தை தொழிலாளர்களான சிறுவர்கள் சிலர், “ஒடிசா ராய்கர் மாவட்டத்தில் இருந்து நாங்கள் வந்திருக்கிறோம். மாதம் 1200 சம்பளம் என்று கூறி சூப்பர்வைசர் வேலைக்கு தான் அழைத்து வந்தார்கள்.

எங்களுக்கு சம்பளம் கொடுக்காமல் உரிமையாளர் மிரட்டி வருகிறார். வீட்டிற்கு செல்ல விரும்புகிறோம் என்று கூறிய நிலையில் சம்பளம் கொடுக்கவில்லை. எனவே, நாங்கள் அங்கிருந்து தப்பி ஓடி வந்து விட்டோம். எங்களுடைய சில நண்பர்கள் இன்னும் அங்கே சிக்கி தவிக்கின்றனர் அவர்களையும் மீட்க வேண்டும்.” என்று போலீசாரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

Baskar

Next Post

2 -ஆம் வகுப்பு சிறுமிக்கு.. ஆளில்லாத இடத்தில் பாலியல் தொல்லை.!

Wed Jan 25 , 2023
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி அருகே தேவர் சோலை பகுதியில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாபுலான் ஓரான் (வயது 30) மற்றும் ராணா ஓரான் (வயது 30) இருவரும் அங்கிருக்கும் ஊட்டி தேயிலை எஸ்டேட் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் சேர்ந்து இரண்டாவது வகுப்பு படிக்கின்ற ஏழு வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். அந்த சிறுமியை, ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு பகுதிக்கு தூக்கிச் சென்று […]
8 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை..! விழிப்புணர்வு நிகழ்ச்சியால் விழித்துக் கொண்ட மாணவிகள்..!

You May Like