fbpx

சூதாட்ட செயலிகள், கடன் செயலிகளுக்கு தடை..!! மத்திய அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு..!!

138 சூதாட்ட செயலிகள், 94 கடன் செயலிகளை தடை செய்யும் பணி தொடங்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஆன்லைன் சூதாட்டத்தால் இளைஞர்கள் தங்களது பணத்தை பறிகொடுத்து தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால், ஆன்லைன் சூதாட்டங்களை தடை விதிக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதேபோல் கடன் செயலிகள் மூலமும் மக்கள் கடன்களை வாங்கி, பிறகு சிரமத்தை சந்தித்து வருகின்றனர். குறிப்பிட்ட தொகையை கடனாக வழங்கி அதற்கு வட்டி என்ற பெயரில், பல்வேறு நிபந்தனைகளை திணித்து பெரிய தொகையை கட்டுமாறு வற்புறுத்துகின்றனர். அவ்வாறு தவணையை செலுத்த மறுக்கும் வாடிக்கையாளர்களை மிரட்டி பணம் வசூலித்து வருகின்றனர்.

இதனால் சூதாட்டம் மற்றும் கடன் செயலிகளை தடை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், நாடு முழுவதும் 138 சூதாட்ட செயலிகள் மற்றும் 94 கடன் செயலிகளை தடை செய்ய மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. உடனடி மற்றும் அவசர நடவடிக்கையாக சீனாவுடன் தொடர்புடைய 138 சூதாட்ட செயலிகள் மற்றும் 94 கடன் செயலிகளை தடை செய்யும் பணி தொடங்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Chella

Next Post

குடித்துவிட்டு மனைவியை தாக்கிய பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர்...!! அடித்து துன்புறுத்துவதாக பரபரப்பு புகார்..!!

Sun Feb 5 , 2023
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான வினோத் காம்ப்ளி மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர். சச்சின் டெண்டுல்கரின் பால்ய கால நண்பரான இவர், அவருடன் இணைந்து பள்ளிகள் இடையேயான கிரிக்கெட் போட்டியில் உலக சாதனை படைத்து பலரின் கவனத்தையும் ஈர்த்தார். பின்னர் இந்திய அணிக்கும் தேர்வாகி பல போட்டிகளில் இவர் விளையாடியுள்ளார். 1993ஆம் ஆண்டில் இருந்து 2000 வரை இந்திய அணிக்காக 104 ஒருநாள் போட்டிகள் மற்றும் 17 டெஸ்ட் போட்டிகளில் […]
குடித்துவிட்டு மனைவியை தாக்கிய பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர்...!! அடித்து துன்புறுத்துவதாக பரபரப்பு புகார்..!!

You May Like