fbpx

தமிழ்நாட்டில் குட்கா, புகையிலைப் பொருட்கள் மீதான தடை மேலும் ஓராண்டு நீட்டிப்பு!

குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் மீதான தடையை மேலும் ஓராண்டு நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு தடை விதித்து கடந்த 2018 ஆம் ஆண்டு அப்போதைய அதிமுக அரசு உத்தரவிட்டிருந்தது. 

அதன்பிறகு தமிழ்நாட்டில் நிக்கோடின் மற்றும் புகையிலை அடிப்படையிலான குட்கா, பான் மசாலா, மெல்லும் புகையிலைப் பொருட்களை தயாரிக்கவும், விற்பனை செய்யவும் ஓராண்டுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்பு ஆணையர்  புதிதாக அரசாணை பிறப்பித்துள்ளார். இந்நிலையில் குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் மீதாடை தடையை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Rupa

Next Post

மோடி தான் பாஸ்…..! ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி புகழாரம்…..!

Wed May 24 , 2023
ஆஸ்திரேலிய நாட்டின் சிட்னி நகரில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப் பயணம் மேற்கொண்டார். ஆஸ்திரேலிய நாட்டில் வாழும் இந்திய வம்சாவழி மக்களை பிரதமர் நரேந்திர மோடி சிட்னியில் உள்ள பிரம்மாண்டமான அரங்கில் சந்தித்தார். பிரதமரைக்கான சுமார் 21,000 இந்தியர்கள் அந்த அரங்கத்தில் ஒன்று திரண்டனர். அந்த அரங்கத்தில் இதற்கு முன்னர் அமெரிக்க ராக் இசை பாடகர் புரூஸ் ஸ்பரிங்ஸ்டீன் இசை நிகழ்ச்சிக்கு தான் இப்படி பெரும் கூட்டம் கூடும் […]

You May Like