fbpx

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை..!! பேரவையில் மசோதா தாக்கல்..!! மீறினால் என்ன தண்டனை தெரியுமா?

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் சட்ட மசோதா, சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை..!!

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளை தடை செய்ய சட்ட மசோதாவை அமைச்சர் ரகுபதி  இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இந்த மசோதா சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவில் ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடுபவருக்கு 3 மாதங்கள் சிறை தண்டனை அல்லது ரூ.5 ஆயிரம் அபராதம் அல்லது அபராதத்துடன் சிறைத் தண்டனை விதிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அந்த அவசரச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள அம்சங்கள் பொறுத்தவரை, ”2 லட்சம் பள்ளி ஆசிரியர்களிடம் அரசு ஆய்வு நடத்தியது. அதில், ஆன்லைன் விளையாட்டுகளால் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றி கேட்கப்பட்டது.

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை..!! பேரவையில் மசோதா தாக்கல்..!! மீறினால் என்ன தண்டனை தெரியுமா?

தண்டனைகள் என்ன தெரியுமா..?

அதில், மாணவர்களின் கல்வியிலான கவனம் மிகவும் பாதிக்கப்பட்டு இருப்பதாக 74% ஆசிரியர்கள் கூறினர். மாணவர்களிடையே சுயமரியாதை குறைந்திருப்பதையும், அதிக கோபமுள்ளவர்களாக மாறிக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும், ஒழுங்கீனமாக நடந்து கொள்கிறார்கள் என்பதையும் 77% ஆசிரியர்கள் குறிப்பிட்டனர். மேலும் பொதுமக்களிடம் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில், மொத்தம் 10,735 இ-மெயில் வந்ததில் 10,708 பேர், ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்யும்படி கேட்டுக் கொண்டனர். ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள், பணம் அல்லது வேறு வெகுமதிகளை வெல்லக்கூடிய வாய்ப்புள்ள அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடுபவருக்கு 3 மாதங்கள் சிறை அல்லது ரூ.5 ஆயிரம் அபராதம் அல்லது அபராதத்துடன் சிறைத் தண்டனையும் விதிக்கப்படும். இந்த விளையாட்டுகள் தொடர்பான விளம்பரம் செய்தால், ஒரு ஆண்டு சிறைத் தண்டனை அல்லது ரூ.5 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை..!! பேரவையில் மசோதா தாக்கல்..!! மீறினால் என்ன தண்டனை தெரியுமா?

ஆணையத்திற்கு அதிகாரிகள் நியமனம்..!!

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் அல்லது பணம் அல்லது வேறு வெகுமதிகளை வெல்லக்கூடிய வாய்ப்புள்ள அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளை அளிப்போருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது ரூ.10 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும். தமிழ்நாடு ஆன்லைன் விளையாட்டு ஆணையத்தை அரசு அமைக்கிறது. இந்த ஆணையத்திற்கு, ஓய்வு பெற்ற தலைமைச் செயலாளர் பதவிக்கும் குறையாத பதவி வகித்தவர் தலைவராக இருப்பார். மேலும் ஓய்வு பெற்ற போலீஸ் ஐ.ஜி., தகவல் தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்ற ஒருவர், ஆன்லைன் விளையாட்டில் நிபுணத்துவம் பெற்ற ஒருவர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பர். இந்த சட்ட மசோதா மூலம் அனைத்து ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளும் தடை செய்யப்படுகிறது.

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை..!! பேரவையில் மசோதா தாக்கல்..!! மீறினால் என்ன தண்டனை தெரியுமா?

கட்டுப்பாடுகள் என்ன..?

பணம் வெல்லக்கூடிய வாய்ப்புள்ள விளையாட்டாக கருத்தப்படும் அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளும் தடை செய்யப்படுகின்றன. எந்தவொரு ஆன்லைன் விளையாட்டை வழங்குபவரும், சூதாட்டத்தை புகுத்தக் கூடாது. அந்த விளையாட்டை விளையாட எவரையும் அனுமதிக்கக் கூடாது. பணம் தொடர்புடைய ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பான விளம்பரங்களை ஊடகங்கள் வெளியிடக்கூடாது. ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளில் பரிமாறப்படும் பணத்தை எந்தவொரு வங்கியும் பரிமாற்றம் செய்யக் கூடாது. எந்தவொரு ஆன்லைன் விளையாட்டு அளிப்பவர்களுக்கான பதிவுச் சான்று 3 ஆண்டுகளுக்கு செல்லும். ஒழுங்குமுறைகளை மீறினால், விளக்கம் கேட்டு அந்தப் பதிவு ரத்து செய்யப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

மருமகளுக்கு காதல் திருமணம் செய்து வைத்த நபர்.! வெட்டிப்போட்ட சகோதரி.!

Wed Oct 19 , 2022
சென்னை வியாசர்பாடியில் சென்ட்ரல் அவென்யூ சாலையில் 58 வயதான மருதுபாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 32 வயதில் மணிகண்டன் என்ற மகன் இருக்கின்றார். மருதுபாண்டிக்கு அமிர்தம் என்ற சகோதரி இருக்கிறார். இந்த சகோதரி இளையான்குடி பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். மணிகண்டனும் அமீர்தத்தின் மகள் ஷாலினியும் காதலித்தனர். ஆனால் இந்த காதல் சகோதரி அமிர்தத்திற்கு பிடிக்கவில்லை. எனவே அவர்களது திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளாததால் மருதுபாண்டி தனது மகன் மற்றும் […]

You May Like