fbpx

யாரும் வாங்காதீங்க…! கேரளாவில் இருந்து வரும் கோழி மற்றும் இறைச்சிக்கு தடை…!

கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி வருவதன் எதிரொலியாக தமிழகத்தில் கோழிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக பரவி வரும் பறவைக் காய்ச்சலால் கேரள மாநிலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கோட்டயம் உள்ளிட்ட பகுதிகள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதியாக உள்ளது. வைரஸ் பாதிப்புகள் அதிகம் பதிவாகியதால், பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து, கோழிகள் மற்றும் பிற வீட்டுப் பறவைகளை அழிக்க அதிகாரிகள் உத்தரவிட்டனர். இந்த நிலையில் தமிழகத்தில் கேரளாவில் இருந்து வரும் கோழி மற்றும் அதன் இறைச்சிகளை விற்பனை செய்ய அதிகாரிகள் தடை விதித்து உத்தரவிட்டு உள்ளனர்.

பறவைக்காய்ச்சல்‌ என்றால் என்ன…?

பறவைக்காய்ச்சல்‌ நோய்‌ என்பது பறவை இனங்களை தாக்கும்‌ ஒரு வைரல்‌ தொற்றுநோய்‌. இந்த நோய்‌ ஆங்கிலத்தில்‌ A Vian influenza மற்றும்‌ Bird Flu என அழைக்கப்படுகிறது. இந்நோய்‌ கோழி, வாத்து, வாண்கோழி, நீர்ப்பறவைகள்‌ மற்றும்‌ வணப்பறவைகள்‌ ஆகியவற்றை முக்கியமாகத்‌ தாக்கும்‌. பறவைக்காய்ச்சல்‌ வைரஸ்‌ கிருமிகள்‌ பல வகைகள்‌இருந்தாலும்‌ H5N1 என்ற வகை வைரஸ்‌ கிருமி அதிக வீரியம்‌ வாய்ந்தது.

நோய்‌ பாதித்த பண்ணைகளில்‌ இறந்த கோழிகள்‌, கோழிக்கழிவுகள்‌, பண்ணை உபகரணங்கள்‌ மற்றும்‌ கோழித்தீவனம்‌ மூலமாக இந்நோய்‌ பரவுகிறது. இந்நோய்க்கு சிகிச்சை எதுவும்‌ இல்லை.நோய்‌ வராமல்‌ தடுக்க நோய்‌ தடுப்பு முறைகளையும்‌, உயிர்‌ பாதுகாப்பு முறைகளையும்‌ பின்பற்ற வேண்டும்‌.

Vignesh

Next Post

EPFO முக்கிய அறிவிப்பு... அதிகரித்த உறுப்பினர் சேர்க்கை...! எவ்வளவு தெரியுமா...?

Mon Apr 22 , 2024
பிப்ரவரியில் 7.78 லட்சம் புதிய உறுப்பினர்கள் இபிஎப்ஓ-வில் சேர்ந்துள்ளனர். இபிஎப்ஓ -வின் தற்காலிக ஊதிய தரவு ஏப்ரல் 20ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதில்; 2024 பிப்ரவரி மாதத்தில் இபிஎப்ஓ 15.48 லட்சம் நிகர உறுப்பினர்களைச் சேர்த்துள்ளது. 2024 பிப்ரவரியில் சுமார் 7.78 லட்சம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று தரவு சுட்டிக்காட்டுகிறது. தரவுகளின் குறிப்பிடத்தக்க அம்சம் 18-25 வயதுக்குட்பட்டவர்களின் ஆதிக்கம் ஆகும். இது பிப்ரவரியில் சேர்க்கப்பட்ட மொத்த புதிய உறுப்பினர்களில் […]

You May Like