fbpx

குழந்தைகளிடம் கவனமாக இருங்க பெற்றோர்களே! உயிருக்கு உலை வைத்த விசில் !

பூந்தமல்லியில் விசில் வைத்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தை அதை விழுங்கியதால் மூச்சுத்திணறி பறிதாபமாக உயிரிழந்தான்.

சென்னை பூந்தமல்லியில் லட்சுமி புரம் சாலையில் பத்மாவதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த் ராஜ் (38)., காய்கறி வியாபாரம் செய்து வரும் இவர் வனஜா என்பவதை திருமணம் செய்து கொண்டார்.இருவருக்கு தர்ஷன் (3) , கயல்விழி (1) என்ற பெண் குழந்தையும் உள்ளனர்

குழந்தைகள் இருவரும் வழக்கம் போல விளையாடிக்கொண்டிருந்தபோது அங்கிருந்த விசிலை தெரியாமல் விழுங்கியுள்ளான். இதை பெற்றோர்கள் கவனிக்கவில்லை. திடீரென குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுமயங்கிய போது முதுகை தட்டியுள்ளனர் அப்போதுதான் விசிலை விழுங்கியது தெரியவந்தது. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசாருக்கு மருத்துவமனை ஊழியர்கள் தகவல் தெரிவித்தனர். கயல்விழியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பின்னர் பெற்றோர் இருவரும் கதறி அழுதும் குழந்தை உயிர் போனது போனதுதான். இது போன்ற சம்பவங்களை தடுக்க பெற்றோர்களாகி நீங்கள் கூடுதல் கவனத்துடன் செயல்படுங்கள்..!!

Next Post

மாணவர்களுக்கான கல்விக் கடன்..!! உத்தரவாத வரம்பு ரூ.10 லட்சம்..? மத்திய அரசு அதிரடி

Thu Oct 13 , 2022
மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்விக் கடனுக்கான உத்தரவாத வரம்பை ரூ.10 லட்சமாக உயர்த்த பொதுத்துறை வங்கிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்விக் கடனுக்கான உத்தரவாத வரம்பு ரூ.7.5 லட்சமாக இருந்து வந்த நிலையில், தற்போது ரூ.10 லட்சமாக உயர்த்த வாய்ப்புள்ளது. ஏற்கனவே, வங்கிகளில் கடன் அனுமதி பெற கால தாமதம் ஆகிறது என்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில், தற்போது உத்தரவாத வரம்பு ரூ.10 லட்சம் ஆக உயர்த்த […]

You May Like