fbpx

இன்ஸ்டாவில் ஆண்களை வளைத்துப் போட்டு..!! இதுவரை 4 பேராம்..!! கில்லாடி பெண்ணுக்கு போலீஸ் வலைவீச்சு..!!

கர்நாடக மாநிலம் தாவணகெரே பகுதியைச் சேர்ந்தவர் பிரசாந்த். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் சினேகா என்ற பெண்ணின் அறிமுகம் கிடைத்துள்ளது. இவர் மாண்டியாவின் நரஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர். இருவரும் தங்களது செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டு, தினமும் பேசி வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் இருவரும் தங்களது காதலை வெளிப்படுத்தியுள்ளனர். இது குறித்து தங்களது வீடுகளில் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, இரு வீட்டார் சமதத்துடன் கடந்த ஆண்டு சினேகாவை பிரசாந்த் திருமணம் செய்து கொண்டார்.

பின்னர், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தான் கர்ப்பமடைந்துள்ளதாகவும், தாய் வீட்டிற்குச் செல்வதாகக் கணவனிடம் கூறிவிட்டு சினேகா சென்றுள்ளார். பிறகு சில நாட்கள் கழித்து அவரது வீட்டிற்குத் தொடர்பு கொண்டபோது சினேகா அங்குச் செல்லவில்லை என்ற தகவல் கிடைத்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பிரசாந்த், மனைவி காணாமல் போனதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையே, சில நாட்களுக்கு முன் திருமணக் கோலத்தில் மனைவி சினேகா மற்றொரு வாலிபரும் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் சினேகா குறித்து விசாரித்தபோதுதான் ஏற்கனவே இவருக்கு 2 திருமணம் நடந்தது என்றும் மூன்றாவதாக பிரசாந்தைத் திருமணம் செய்தது தெரியவந்தது. தற்போது 4-வதாக மற்றொரு வாலிபரைத் திருமணம் செய்துள்ளார்.

முதல் கணவரைப் பிரிந்த சினேகா, தனக்குத் திருமணம் ஆகவில்லை என்று கூறி அடுத்தடுத்து 3 பேரை ஏமாற்றி திருமணம் செய்துள்ளது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, தலைமறைவாக இருக்கும் சினேகாவை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

Chella

Next Post

டிச.30ல் திறப்பு!… அயோத்தி ரயில் நிலையத்தின் பெயர் அதிரடி மாற்றம்!… புதிய பெயரும்!… ஆச்சரியமான அர்த்தமும்!

Fri Dec 29 , 2023
அயோத்தி கட்டப்பட்டுள்ள அதிநவீன ரயில் நிலையத்தை நாளை மறுநாள் பிரதமர் மோடி திறந்துவைக்கவுள்ள நிலையில், அயோத்தி தாம் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. கட்டுமானப் பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கிஉள்ளது. இக்கோயில் வரும் ஜனவரி 22-ம் தேதி திறந்து வைக்கப்பட உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இக்கோயிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் அயோத்தியில் உள்கட்டமைப்பு […]

You May Like