கோடை காலம் வந்துவிட்டாலே பலருக்கும் சருமத்தில் பிரச்சனைகள் ஏற்படுவது இயல்பான ஒன்றுதான். ஆகவே கோடைகால சரும பிரச்சனைகளிலிருந்து தற்காத்துக் கொள்வதற்காக தக்காளியின் பயன்கள் தொடர்பாக தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.
தோல் பராமரிப்புக்கு தேவைப்படும் கரோட்டின் மற்றும் லுடீன் உள்ளிட்டவை தக்காளியில் செறிவாக இருக்கிறது. தக்காளியை சாறு பிழிந்து முகத்தில் பூசி வந்தால் கோடை காலத்தில் உண்டாகும் முக சுருக்கங்கள் அகலும்.
தக்காளி சாறுடன் அரை ஸ்பூன் தேன், பப்பாளி துண்டுகள் ஆகியவற்றை சேர்த்து பிசைந்து தோலில் தடவி வந்தால் தோல் பொலிவுடன் காணப்படும். தக்காளி சாறு சரும துளைகளை இறுக்கமாக்கி நல்ல நிறத்தை கொடுக்கிறது
தக்காளியுடன் பால் முல்தானி உள்ளிட்டவற்றை சேர்த்து பிசைந்து தடவினால் இறந்த செல்கள் நீங்கி வெண்மையான முகமாக மாற வாய்ப்பு உள்ளது. கோடை காலத்தில் வறண்ட சருமத்தை பரபரப்பாக்குவதற்கு தக்காளி சாறுடன் வாழைப்பழம் ஆலிவ் ஆயில் உள்ளிட்டவற்றை சேர்த்து தடவலாம். தக்காளி சாறுடன் புதினா இலைகளை சேர்த்து முகத்தில் தடவி பத்து நிமிடம் சென்ற பின்பு கழுவி வந்தால் முகப்பருக்கள் நீங்கும்.