fbpx

பிபோர்ஜோய் புயல்..!! அடுத்த 3 மணிநேரத்தில்..!! 7 மாவட்டங்களில் கொட்டித் தீர்க்க காத்திருக்கும் மழை..!! – வானிலை மையம்

தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில் மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அரபிக் கடலில் மையம் கொண்டுள்ள பிபோர்ஜோய் புயல் அடுத்த சில மணிநேரங்களில் வலுவடைய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது கோவாவுக்கு 900 கி.மீ. தொலைவில் இந்த புயல் மையம் கொண்டுள்ளது. பிபோர்ஜோய் புயல் காரணமாக மகாராஷ்டிரா முதல் கேரளா வரையிலான அரபி கடல் பகுதியில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வெப்பச்சலனத்தால் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில இடங்களில் இன்று முதல் ஜூன் 10ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தஞ்சாவூர், நாகை, திருவாரூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில் மழை பெய்யக் கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Chella

Next Post

திடுக்கிடும் சம்பவம்..!! சாக்லேட் வாங்கிக் கொடுத்து 6 மாணவிகளை பலாத்காரம் செய்த தலைமை ஆசிரியர்..!!

Wed Jun 7 , 2023
இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் பல்வேறு விதமாக, கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இது குறித்த தகவல்கள் தினம் தினம் வந்து கொண்டுதான் இருக்கிறது. இதை பார்க்கும்பொழுது நெஞ்சமே பதறுகிறது. பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு தக்க தண்டனை கொடுத்தாலும் இன்னும் பாலியல் குற்றங்கள் குறைந்தபாடில்லை. அந்தவகையில், ராஜஸ்தான் மாநிலம் துங்கர்பூரில் பாலியல் வன்கொடுமை சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. 6 மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக […]

You May Like