fbpx

பெரும் விபத்து..!! 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து..!! 36 பேர் சம்பவ இடத்திலேயே பலி..!!

ஜம்மு பிரிவின் தோடா மாவட்டத்தில் பெரும் சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தின் அசார் என்ற இடத்தில் பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சுமார் 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 36 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், பலர் காயமடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் அருகில் இருந்தவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

மேலும், சம்பவம் குறித்து காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்ற அஞ்சப்படுகிறது.

வழித்தடத்தில் 3 பேருந்துகள் ஒன்றாக இயங்கியதாகவும், ஒன்றையொன்று முந்திச் செல்லும் பந்தயத்தில் இந்த பெரும் விபத்து நடந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல் கிடைத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காயமடைந்தவர்களுக்கு உடனடியாக உரிய சிகிச்சை அளிக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Chella

Next Post

உங்கள் வங்கிக் கணக்கிற்கு ரூ.2,000 வந்துவிட்டது..!! உடனே செக் பண்ணுங்க..!!

Wed Nov 15 , 2023
பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் 15-வது தவணையாக ரூ.2,000 வரவு வைக்கப்பட்டு வருகிறது. பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரூ.6,000 நிதியுதவி மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் தகுதி வாய்ந்த விவசாயிகள் அனைவருக்குமே 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2,000 வீதம் ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கப்படுகிறது. இந்த தொகை 3 தவணைகளாக ஏப்ரல் – ஜுலை, ஆகஸ்ட் – நவம்பர் மற்றும் டிசம்பர் […]

You May Like